Thursday, September 30, 2010

ராமநாதபுரத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

30 Sep 2010 11:52:44 AM IST

ராமநாதபுரத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்


ராமநாதபுரம்,செப்.29: கடல் அட்டையைப் பிடிக்க அரசு விதித்துள்ள தடையை நீக்க வலியுறுத்தி ராமநாதபுரம் அரசு போக்குவரத்துக் கழகப் பணிமனை முன்பாக ராமநாதபுரம் மாவட்ட மீன்பிடித் தொழிலாளர் யூனியன் கூட்டமைப்பு சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கூட்டமைப்பின் தலைவர் பால்ச்சாமி ஆர்ப்பாட்டத்துக்குத் தலைமை வகித்தார். வேதாளை சங்கு குளித்தல் தொழிலாளர் சங்கத் தலைவர் ஜப்பார் முன்னிலை வகித்தார். கூட்டமைப்பின் செயலாளர் ஜோசப் வரவேற்றரார்.
தமிழ்நாடு மீன்பிடித் தொழிற்சங்கக் கூட்டமைப்பு ஏ.ஐ.டி.யூ.சி.பிரிவின் மாநிலத் தலைவர் முருகானந்தம், மீன்பிடித் தொழிலாளர் யூனியன் கூட்டமைப்பின் திருப்புல்லாணி வட்டார செயலாளர் ஹமீது இப்ராகிம் ஆகியோர் கடல் அட்டையைப் பிடிக்க அரசு விதித்துள்ள தடையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பேசினார்கள். ராமநாதபுரத்தில் பெய்த தொடர்மழையையும் பொருட்படுத்தாமல் மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

© Copyright 2008 Dinamani

Tuesday, September 21, 2010

Posted by Picasa
Posted by Picasa
Posted by Picasa

கடலோர மக்கள் கூட்டமைப்பு மாதக்கூட்டம் –செப்டம்பர்

கடலோர மக்கள் கூட்டமைப்பு

மாதக்கூட்டம் செப்ம்பர்

இடம்: தூத்துக்குடி பல்நோக்கு சமூக சேவை சங்கம் , தூத்துக்குடி.

நாள்; 21.09.2010. செவ்வாய்க் கிழமை

நேரம் : காலை 10.00 மணி

கலந்துரையாடலுக்கான கருத்துக்கள்

1. வரவேற்பு

2. அறிமுகம்

3. கடந்த கூட்ட அறிக்கை

4. வரவு செலவு

5. மாவட்ட ஆட்சியர் மனுக்கள் 06.09.2010.( தூத்துக்குடி & திருநெல்வேலி) மக்கள் பங்கேற்பு

6. ஊடக செய்திகள் (தூத்துக்குடி , திருநெல்வேலி & கன்னியாகுமரி)

7. நெல்லை மாவட்ட ஆட்சியர் - உவரி கடல் அரிப்பு பார்த்தது. நெல்லை மக்களவை உறுப்பினர் மனு

8. கன்னியாகுமரி காணாமல் போன மீனவர்கள் & ஊடகங்கள்

9. கன்னியாகுமரி விசைப்படகு & நாட்டுபடகு மோதல்கள்

10. நித்ரவிளையில் கப்பல் திடீர் ஆய்வு.

11. ராஜாக்கமங்கலம் பிரச்சனை

12. கடல் அட்டை பிரச்சனை இராமநாதபுரம் & கடல் அட்டை - ஐ.நா. வெளியீடு

13. துறைமுகங்கள் உருவாக்கம் , வளர்ச்சி . தெளிவுக்கள். தினமணி செய்தி 14.09.2010

14. கடலோரத்தில் அனல் மின் நிலையங்கள் பெருக்கம் தொடர்பான கூட்டு நடவடிக்கை.

15. இந்திய மீனவர்களின் மீன்பிடித்தல் வெப்பமயமாதலுக்கு காரணம் ஆய்வு முடிவு

16. மத்திய அரசின் கடலோர ஒழுங்காற்று அறிவிக்கை ஆணை ,2010 வெளியீடு & 60 நாட்கள் கெடு.

17. சைக்கிள் பிரசரப்பயணம் மாவட்ட முடிவுகள் & ஒத்துழைப்பு நிதி பங்களிப்பு

18. மீனவர் நாள் நிகழ்ச்சிகள். 21.11.2010 மாவட்ட செயல்பாடுகள்.

19. க.ம.கூ . வழக்கறிஞர் திரு. ஜஸ்டின் உதவ விருப்பம்.

20. தகவல் அறியும் உரிமைச் சட்டம் க.ம.கூ பயன்படுத்துவது குறைவு - பொறுப்பு எடுத்தல்.

21. மாவட்ட பொறுப்பாளர்கள் தங்கள் பணியின் பொறுப்பை உணர்தல், திட்டமிடுதல் & செயல்படுதல். மாவட்ட கூட்டங்கள் நடத்துதல்.

22. மாவட்ட பிரச்சனைகளை ஊடகங்கள் கவனத்திற்கு கொண்டுவருதல்.

23. நமது அமைப்புக்கான நிதிப் பெருக்கம் வழிவகைகள்.

24. க.ம.கூ கான மாவட்ட முகவரிகள் & இலட்சினை & தூத்துக்குடி அலுவலகத்தில் விளம்பரப்பலகை.

25. மீனவ மக்கள் கட்சி மாநாடு அக்டோபர் - திருச்செந்தூர்

26. டி மெரிடியன் ஹோட்டல் தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகம் எதிரில்.

27. மன்னார் வளைகுடாவில் ஒளிர்மிதவைகள் தற்போது நிலை டெல்லி பயணம்.(16)

28. தூத்துக்குடி மாவட்ட குடிமக்கள் கூட்டமைப்பு .

29. Ţɡ¸÷ °÷ÅÄõ - ¸ÄÅÃí¸û - ÌÁ¡¢ - Á¢¼¡Äõ À̾¢

30. கவனத்திற்கான பிற செய்திகள்.

Tuesday, September 14, 2010

உவரியில் கடல் அரிப்பால் சாலைகள், வீடுகள் சேதம் | 8.25 கோடி திட்டத்தை உடனே நிறைவேற்ற எம்.பி. மனு

14 Sep 2010 12:31:29 PM IST

உவரியில் கடல் அரிப்பால் சாலைகள், வீடுகள் சேதம் | 8.25 கோடி திட்டத்தை உடனே நிறைவேற்ற எம்.பி. மனு


திருநெல்வேலி, செப். 13: திருநெல்வேலி மாவட்டம், உவரியில் கடல் அரிப்பால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடுப்புச் சுவர் மற்றும் தூண்டில் வளைவு அமைக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, எஸ்.எஸ். ராமசுப்பு எம்.பி. கேட்டுக் கொண்டுள்ளார்.
திருநெல்வேலியில் திங்கள்கிழமை நடைபெற்ற மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறைதீர் நாள் கூட்டத்துக்கு வந்திருந்த அவர் ஆட்சியரை சந்தித்து மேற்கண்ட கோரிக்கை அடங்கிய மனுவை ஆட்சியரிடம் அளித்தார்.
பின்னர் ராமசுப்பு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: உவரியில் கடல் அரிப்பால் சாலைகளும், வீடுகளும் பாதிக்கப்பட்டு வருகின்றன. இதனால் அங்குள்ள சுமார் 200 முதல் 300 வீடுகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே, இங்கு தடுப்புச்சுவர் கட்டவும், தூண்டில் வளைவு அமைக்கவும் | 8.25 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு மாவட்ட நிர்வாகம் மூலம் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. எனினும், இதுவரையில் திட்டம் நிறைவேற்றப்படவில்லை.
எனவே, அரசு விரைவாக நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியரிடம் கேட்டுக் கொண்டுள்ளேன்.
இம் மாவட்டத்தில் உள்ள 10 மீனவ கிராமங்களிலும் தூண்டில் வளைவு அமைக்க | 46 கோடி மதிப்பீட்டில் திட்டம் தயாரிக்கப்பட்டு மத்திய அரசின் நிதி கோரப்பட்டுள்ளது. அதுவும் பரிசீலனையில் உள்ளது.
கூத்தங்குளி மீனவர் கிராமத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்டோருக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் விடுபட்ட 20 பேருக்கு வீடு கட்டிக் கொடுக்க வேண்டும் என ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்.
இயற்கைப் பேரழிவு: தற்போது சுனாமி, வெள்ளம், பஞ்சம் ஆகியவற்றால் ஏற்படும் பாதிப்புகளுக்கு மட்டுமே மத்திய அரசு நிவாரணம் வழங்கி வருகிறது.
தென் மாவட்டங்களில் குறிப்பாக திருநெல்வேலி மாவட்டத்தில் சூறாவளிக் காற்றால் ஆண்டுதோறும் வாழைகள் சேதமடைந்து வருகின்றன. இதனால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது.
எனவே, இயற்கைப் பேரழிவுக்கான காரணிகளின் பட்டியலில் சூறாவளியையும் சேர்க்க மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளேன். அது அரசின் பரிசீலனையில் உள்ளது.
இம் மாவட்டத்தில் இந்த ஆண்டு சுமார் | 50 லட்சம் மதிப்புள்ள வாழைகள் சூறாவளிக் காற்றால் சேதமடைந்துள்ளன.
அவற்றுக்கு இதுவரையில் இழப்பீடு வழங்கப்படவில்லை. இதேபோல நெற்பயிரும் சேதமடைந்துள்ளது.
ஆந்திர மாநிலத்தில் இருந்து எரிவாயுவை தூத்துக்குடிக்கு கொண்டு வரும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளேன். அத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் இங்குள்ள தொழிற்சாலைகள் பெரிதும் பயன்பெறும். நான்குனேரி சிறப்பு பொருளாதார மண்டலத்தில் அமைய உள்ள தொழிற்சாலைகளுக்கு பயன் கிடைக்கும்.
புதிய கட்டடம்: பாளையங்கோட்டை வண்ணார்பேட்டையில் உள்ள மேம்பாலத்துக்கு செல்லப்பாண்டியன் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஆனால், அதற்கான பெயர்ப்பலகை இன்னும் வைக்கப்படவில்லை. அதை வைக்க வேண்டும்.
நெல்லை பத்திரிகையாளர் மன்றத்துக்கு புதிய கட்டடம் கட்டுவதற்கு என் தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து | 6 லட்சமும், அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான் | 4 லட்சமும் கொடுத்துள்ளோம். அப் பணியையும் விரைந்து மேற்கொள்ளும்படி ஆட்சியரிடம் கேட்டுக் கொண்டேன் என்றார் அவர்.

© Copyright 2008 Dinamani

உவரியில் கற்களைக் கொட்டி கடல்அரிப்பு தடுக்கப்படும்: ஆட்சியர்

13 Sep 2010 11:10:28 AM IST

உவரியில் கற்களைக் கொட்டி கடல்அரிப்பு தடுக்கப்படும்: ஆட்சியர்


வள்ளியூர், செப். 12: திருநெல்வேலி மாவட்டம் உவரியில் கடல் அரிப்பால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆட்சியர் மு.ஜெயராமன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார். அப்போது, பாதிக்கப்பட்ட கடற்கரையில் பாராங்கற்களைக் கொட்டித் தடுப்புகள் ஏற்படுத்த பொதுப் பணித்துறையினருக்கு அவர் உத்தரவிட்டார்.
உவரி கடற்கரையில் அந்தோனியார் தேவாலயம் உள்ளிட்ட பகுதிகளில் அலைகளின் சீற்றத்தால் கடல் அரிப்பு அதிகரித்துள்ளது. கடற்கரையையொட்டி அமைக்கப்பட்டிருந்த தார்சாலை முற்றிலும் பாதிப்படைந்துள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாள்களாக கடல் சீற்றம் அதிகரித்ததால் ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தன. கரையையொட்டி அமைந்துள்ள மீனவர்களின் குடியிருப்புகளுக்குள் கடல்நீர் புகுந்தது.
இதனால் மீனவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். கடல் அரிப்பால் பாதிப்படைந்த பகுதிகளை ஆட்சியர் மு.ஜெயராமன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார்.
அவரிடம், மீனவர்கள் தூண்டில் பாலம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதற்கு பதிலளித்த ஆட்சியர் தூண்டில் பாலம் அமைப்பதற்கான முதல்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
அதற்கு முன்பு கடல் அரிப்பைத் தடுக்கும் விதமாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் பாராங்கற்களை கொட்டி குடியிருப்புகளில் தண்ணீர் புகுவது உடனடியாகத் தடுக்கப்படும்.பின்னர், நிரந்தரமாக கடல்அரிப்பைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
இதைத்தொடர்ந்து, சுற்றுலா தலமாக அறிவிக்கப்பட்டுள்ள கரைசுத்து உவரி சுயம்புலிங்கசுவாமி கோயில் பகுதியில் | 1 கோடி செலவில் நடைபெறும் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகளை ஆட்சியர் ஆய்வு செய்தார். இடையன்குடி கால்டுவெல் நினைவு இல்லத்தில் நடைபெற்று வரும் பணிகளையும் அவர் பார்வையிட்டார்.
ஆட்சியருடன் ராதாபுரம் வட்டாட்சியர் (பொறுப்பு) ஆறுமுகம், துணை வட்டாட்சியர் அந்தோனிராஜ், கிராம நிர்வாக அலுவலர்கள் குமார், மகாலிங்கம், கோபால், ஊராட்சித் தலைவர்கள் இடையன்குடி சேகர், துணைத் தலைவர் கிறிஸ்டோபர், கரைசுத்து உவரி ஊராட்சித் தலைவர் ராஜன் உள்ளிட்டோர் சென்றனர்.

© Copyright 2008 Dinamani

Tuesday, September 7, 2010

Posted by Picasa
Posted by Picasa
Posted by Picasa
Posted by Picasa
Posted by Picasa
Posted by Picasa

தினமலர் - கடலோர மக்கள் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 07,2010,01:02 IST

தூத்துக்குடி : மாதந்தோறும் செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமைகளில் மீனவர் குறைதீர்க்கும் கூட்டம் நடத்த வலியுறுத்தி நேற்று கடலோர மக்கள் கூட்டமைப்பு சார்பில் கலெக்டர் ஆபிஸ் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

தூத்துக்குடி மாவட்ட கடலோர மக்கள் கூட்டமைப்பு சார்பில் கடலோர மீனவ கிராமத்தை சேர்ந்தவர்கள் அதிகமானோர் நேற்று கலெக்டர் ஆபிசிற்கு திரண்டு வந்தனர். அவர்கள் கலெக்டர் ஆபிஸ் முன்பு கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் கலெக்டரிடம் அவர்கள் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறப்பட்டிருப்பதாவது;தமிழகத்தில் அனைத்து கடலோர மாவட்டங்களிலும் நடைமுறையில் உள்ளது போல் சுமார் இரண்டு லட்சத்திற்கு மேற்பட்ட மீனவர்கள் வாழும் தூத்துக்குடி மாவட்டத்திலும், மீனவர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட கலெக்டர் தலைமையில் மாதந்தோறும் செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமைகளில் மீனவர் குறைதீர்க்கும் கூட்டம் நடத்த வேண்டும்.தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கடலோர கிராம ஊராட்சிகளில் இதுவரையிலும் மனுநீதி முகாம்கள் நடந்ததாக வரலாறு இல்லை. மாவட்ட நிர்வாகம் கிராம மக்களை புறக்கணிக்காமல் இம் மாவட்டத்தில் உள்ள கடலோர கிராம ஊராட்சிகளிலும் மனுநீதிநாள் முகாம்கள் நடத்தி கடலோர கிராம மக்களின் துன்பங்களை அறிந்து, பிரச்னைகளை புரிந்து அதனை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.தூத்துக்குடி மாவட்ட நாட்டுபடகு மீனவர்களுக்கு அந்தந்த மீனவ கிராமங்களிலே அரசு கொடுத்த வாக்குறுதிபடி மாதத்திற்கு 300 லிட்டர் மண்ணெண்ணெய் ரேஷன் கடையில் வழங்கும் விலைக்கே வழங்க வேண்டும்.மத்திய அரசு தேசிய கடல் வளப்பூங்கா திட்டத்தை கைவிட்டு உயிர்கோள காப்பக திட்டத்தை மட்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

கடலோர மக்கள் கூட்டமைப்பு அமைப்பாளர் புஷ்பராயன் தலைமை வகித்தார். அன்டன்கோமஸ், பங்கு தந்தைகள் மரியஜான், பென்சிகர், பிரதீப், செல்வன் மற்றும் 23 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கலந்து கொண்டனர்.


Monday, September 6, 2010

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாதந்தோறும் மீனவர் குறை தீர்க்கும் கூட்டம் நடத்தப்பட வேண்டி - 06.09.2010

கடலோர மக்கள் கூட்டமைப்பு

அந்தோணியார் மீன்பிடித் தொழிலாளர் முன்னேற்ற சங்கம்,

கூத்தென்கழி 627 104.

நெல்லை மாவட்டம் ,

தொலைபேசி : 04637 275395 ;மின் அஞ்சல்: cpfsouth@gmail.com கைபேசி : 98421 54073.

நாள் ; 06.09.2010

பெறுநர்

திருமிகு. மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்,

திருநெல்வேலி மாவட்டம்.

திருநெல்வேலி

மதிப்புமிகு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு,

பொருள் : மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாதந்தோறும் மீனவர் குறை தீர்க்கும் கூட்டம் நடத்தப்பட வேண்டி.

வணக்கம்!.

  1. தமிழ்நாட்டின் அனைத்து கடலோர மாவட்டங்களிலும் நடைமுறையில் உள்ளது போல சுமார் அறுபதாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வாழும் திருநெல்வேலி மாவட்டத்திலும், மீனவர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாதந்தோறும் செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமைகளில் மீனவர் குறை தீர்க்கும் கூட்டம் நடத்தப்பட வேண்டும்.

  1. தமிழக அரசு மீனவ மக்களுக்கு வாக்குறுதி கொடுத்தது போல, திருநெல்வேலி மாவட்ட நாட்டுப் படகு மீனவர்களுக்கு அந்தந்த மீனவ கிராமங்களிலேயே மண்ணெண்ணெய் விற்பனை மையங்கள் அமைத்து, நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் விலைக்கே, நாட்டுப் படகு ஒன்றிற்கு மாதந்தோறும் 300 லிட்டர் வீதம் வழங்கிட நடவடிக்கை மேற்க்கொள்ள வேண்டும்.

  1. தமிழக அரசின் மற்ற நலவாரியங்கள் போல மீனவர் நல வாரியத்தினையும் தொழிலாளர் நலத்துறையுடன் இணைத்து, தனி அதிகாரி, தனி அலுவலகம் அமைத்து மீனவர் நல வாரியத் திட்டங்கள் காலம் தவறாமலும், கட்சிப் பாகுபாடின்றியும் மீனவ மக்களுக்குக் கிடைத்திட வழிவகை செய்ய வேண்டும்.

  1. கடலரிப்பினால் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அனைத்து கடலோர கிராமங்களும் கடலில் மூழ்கும் அபாயம் ஏற்ப்பட்டுள்ளதால் அதற்கான காரணத்தினை ஆய்வு செய்து, நிரந்தர தீர்விற்கான வழிகண்டு, மீனவக் குடியிருப்புகள் மற்றும் மீனவ மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்து, மீன் பிடித் தொழிலுக்கான வாழ்வாதார உத்தரவாதத்தினை ஏற்படுத்தித் தரக் கோருகின்றோம்.

நன்றி

இப்படிக்கு,

சேசு அந்தோனி

தலைவர்.

நகல்: 1,மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்கள்,

சென்னை

2.ஊடகத்துறைக்காக.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாதந்தோறும் மீனவர் குறை தீர்க்கும் கூட்டம் நடத்தப்பட வேண்டி.

Posted by Picasa

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாதந்தோறும் மீனவர் குறை தீர்க்கும் கூட்டம் நடத்தப்பட வேண்டி

கடலோர மக்கள் கூட்டமைப்பு

11/106 B, கேப்டன் குடியிருப்பு ,

ஆரோக்கியபுரம் முதன்மைச் சாலை,

தூத்துக்குடி-628002

தொலைபேசி: 04612361699 மின்னஞ்சல்: cpfsouth@gmail.com. கைபேசி: 9842154073

நாள்: 06.09.2010

பெறுநர்:

திருமிகு. மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்,

தூத்துக்குடி மாவட்டம்.

தூத்துக்குடி

மதிப்புமிகு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு,

பொருள் : மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாதந்தோறும் மீனவர் குறை தீர்க்கும் கூட்டம் நடத்தப்பட வேண்டி.

வணக்கம்!.

  1. தமிழ்நாட்டின் அனைத்து கடலோர மாவட்டங்களிலும் நடைமுறையில் உள்ளது போல சுமார் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வாழும் தூத்துக்குடி மாவட்டத்திலும், மீனவர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாதந்தோறும் செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமைகளில் மீனவர் குறை தீர்க்கும் கூட்டம் நடத்தப்பட வேண்டும்.

  1. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கடலோர கிராம ஊராட்சிகளில் இதுவரையிலும் மனுநீதி முகாம்கள் நடந்ததாக வரலாறு இல்லை. ஆகவே, மாவட்ட ஆட்சியர் கடலோர கிராமங்களை புறக்கணிக்காமல், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கடலோர கிராம ஊராட்சிகளிலும் மனுநீதி முகாம்கள் நடத்தி கடலோர கிராம மக்களின் துன்பங்களை அறிந்து ,பிரசன்னைகளைப் புரிந்து ,அவைகளை தீர்க்க உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம்.

  1. தமிழக அரசு மீனவ மக்களுக்கு வாக்குறுதி கொடுத்தது போல, தூத்துக்குடி மாவட்ட நாட்டுப் படகு மீனவர்களுக்கு அந்தந்த மீனவ கிராமங்களிலேயே மண்ணெண்ணெய் விற்பனை மையங்கள் அமைத்து, நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் விலைக்கே, நாட்டுப் படகு ஒன்றிற்கு மாதந்தோறும் 300 லிட்டர் வீதம் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

  1. தமிழக அரசு இது வரையிலும் நாட்டுப்படகு மீனவர்களுக்கு வழங்கிவந்த 250 லிட்டர் டீசல் மானியத்தை உயர்த்தி 300 லிட்டர் வழங்கப்படும் என்று 2010 ஆம் ஆண்டு, சூன் மாதம் அறிவித்தது. அறிவித்து மூன்று மாதங்கள் ஆகியும் இது வரை உயர்த்தி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட 50 லிட்டர் டீசல் ஐ வழங்க தமிழக அரசோ , மாவட்ட நிர்வாகமோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே 50 லிட்டர் டீசல் ஐ வழங்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

  1. கடந்த பிப்ரவரி மாதம் ,தூத்துக்குடி மாவட்டத்தில் வீசிய புயல் காற்றால் பாதிக்கப்பட்ட நாட்டுப்படகுகளுக்கு அறிவிக்கப்பட்ட புயல் நிவாரண உதவி ரூபாய் 59 இலட்சத்தை இனியும் காலந்தாழ்த்தாது உடனடியாக வழங்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம்.

  1. தமிழக அரசின் மற்ற நலவாரியங்கள் போல மீனவர் நல வாரியத்தினையும் தொழிலாளர் நலத்துறையுடன் இணைத்து, தனி அதிகாரி, தனி அலுவலகம் அமைத்து மீனவர் நல வாரியத் திட்டங்கள் காலம் தவறாமலும், கட்சிப் பாகுபாடின்றியும் மீனவ மக்களுக்குக் கிடைத்திட வழிவகை செய்ய வேண்டும்.

  1. 2010-2011 jkpof murpd; epjpepiy mwpf;ifapy; mwptpf;fg;gl;Ls;s kPd; FOk njhopw;Ngl;ilia flw;fiuf;Fk;> kPdtUf;Fk; vt;tpj njhlHGk; ,y;yhj J}j;Jf;Fb khtl;lk;> rhj;jhd;Fsk; tl;lj;jpYs;s gplhNehp fpuhkj;jpypUe;J cldbahf khw;wp kPd; njhopy; tsHr;rpf;F VJthfTk;> kPdtHfSf;F gad;gLk; tifapYk; ,e;jj; jpl;lj;ij J}j;Jf;Fb flNyhu fpuhkk; xd;wpy; mikf;f eltbf;if vLf;f வழி செய்ய வேண்டும்.
  2. மன்னார் வளைகுடா தேசிய கடல் வளப் பூங்கா என்ற பெயரில், தீவுகளைச் சுற்றி ஒளிர்மிதவைகள் மூலம் கடலுக்குள் வேலி அமைக்கும் திட்டம் தூத்துக்குடி மாவட்ட மீனவர்களின் வாழ்வாதாரத்தினை பெரிதும் பாதிக்கின்றது. எனவே இத்திட்டத்தை மத்திய அரசு நிரந்தரமாக கைவிடவேண்டும். மேலும் , மத்திய அரசு தேசிய கடல் வளப் பூங்கா திட்டத்தை கைவிட்டுவிட்டு , உயிர் கோளப் காப்பகத் திட்டதை மட்டும் நடைமுறைப் படுத்த மாவட்ட நிர்வாகம் சிபாரிசு செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி. இப்படிக்கு,

ம. புஷ்பராயன்.

அமைப்பாளர்,

நகல்: 1,மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்கள்,

சென்னை

2.ஊடகத்துறைக்காக.