Tuesday, August 31, 2010

மன்னார் வளைகுடாவின் தீவுகளில் வேட்டை தடுப்புக்கூடங்கள்

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 30,2010,23:13 IST

ராமநாதபுரம் : மன்னார் வளைகுடாவின் தீவுகளில் வேட்டை தடுப்புக்கூடங்கள் அமைக்கும் திட்டத்தை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. மன்னார் வளைகுடாவின் 21 தீவுகளில், அதிக அளவிலான கடல்சார் வளங்கள் காணப்படுகின்றன. இவற்றை அபகரிக்கும் முயற்சியில் பல்வேறு கும்பல்கள் தொடர்ந்து கைவரிசை காட்டி வருகின்றன. வனத்துறை, மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பாக அறக்கட்டளை , மீன்வளத்துறை அதிகாரிகளின் கண்காணிப்பு இருந்தும், அதையும் மீறி சில நேரங்களில் அபகரிப்பு தடுக்க முடியாததாக உள்ளது. தீவுகளில் தங்கி கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணி மேற்கொள்ள வாய்ப்பில்லாமல் போனதே இதற்கு முக்கிய காரணமாகும். இதை தடுக்கும் விதமாக, தேசிய காப்பக பாதுகாப்பு திட்டத்தில் "வேட்டை தடுப்புக்கூடங்கள்' அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக கடந்த 2008-09ல் மன்னார் வளைகுடாவின் குருசடை, அப்பா, முயல் தீவுகளில் வேட்டை தடுப்பு கூடங்கள் தலா 4.25 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டது.


வனத்துறையினர் இங்கு தங்கி, இரவு பகலாக கண்காணிப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர். தற்போது இத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்த வனத்துறையினர் முடிவுசெய்துள்ளனர். அதன் படி தலையாரி, சிங்கிள், வான்தீவுகளில் "வேட்டை தடுப்புக்கூடம்' அமைக்க, அரசிடம் வலியுறுத்தப்பட்டது. ஒப்புதல் பெறப்பட்டுள்ள நிலையில், விரைவில் அதற்கான பணி தொடங்க உள்ளது. தொடர்ந்து மன்னார் வளைகுடாவின் பெரும்பான்மை தீவுகளில் இத்திட்டத்தை விரிவுபடுத்தி, அங்கு முழுமையான கண்காணிப்பு பணியை அமல்படுத்தவும் திட்டமிட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்ட வனப்பாதுகாவலர் சுந்தரக்குமார் கூறியதாவது: தற்போது மூன்று தீவுகளில் உள்ள இத்திட்டத்தை ,மேலும் மூன்று தீவுகளில் கொண்டு வந்து விரிவாக்கம் செய்ய உள்ளோம். எஞ்சியுள்ள தீவுகளிலும் இத்திட்டம் விரைவில் கொண்டுவரப்படும், என்றார்

Posted by Picasa

Saturday, August 28, 2010

இந்தியக் கடல் வளத்தை அழிக்கும் வெளிநாட்டு கடல்பாசி: குருசடைத் தீவில் அதிகாரிகள் குழு ஆய்வு

27 Aug 2010 12:45:40 PM IST

இந்தியக் கடல் வளத்தை அழிக்கும் வெளிநாட்டு கடல்பாசி: குருசடைத் தீவில் அதிகாரிகள் குழு ஆய்வு

ராமநாதபுரம், ஆக. 26: இந்தியாவில் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் அரியவகை கடல் வாழ் உயிரினங்களின் புகழிடமாக விளங்கும் பவளப் பாறைகளை கப்பா பைகஸ் எனும் வெளிநாட்டு கடல்பாசி அழித்து வருவதை ராமநாதபுரம் அருகேயுள்ள குருசடைத் தீவில் ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்ட அதிகாரிகள் குழுவினர் வியாழக்கிழமை நேரில் ஆய்வுசெய்து, அதிர்ச்சியடைந்தனர்.

இந்தியக் கிழக்கு கடற்கரையில் ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் தீவிலிருந்து

கன்னியாகுமரி வரை பரவிக் காணப்படும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 21 சிறு பவளப் பாறைத் தீவுகள் உள்ளன. உலகிலேயே வேறு எங்கும் இல்லாத வகையில் இப் பகுதியில் அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள் சுமார் 3,600-க்கும் மேற்பட்டவை உயிர் வாழ்கின்றன. இவ் உயிரினங்களின் வளர்ச்சிக்கு

பவளப் பாறைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. எனவேதான், இப் பகுதியை மத்திய அரசு தேசிய கடற் பூங்காவாக அறிவித்து, இப் பகுதியைப் பாதுகாத்து வருகிறது.

வெடி வைத்துத் தகர்ப்பது, கழிவு நீர் கடலில் கலப்பது, எண்ணெய்க் கசிவு நீர் மற்றும் ரசாயனக் கழிவுகளால்தான் பெரும்பாலும் கடல் வளம் அழிய வாய்ப்புண்டு. ஆனால், தற்போது இக் கடல் பகுதியில் காணப்படும் பவளப் பாறைகள் எனப்படும் உயிரினங்களை பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து கடல் வழியாக ஊடுருவியுள்ள கப்பா பைகஸ் எனப்படும் கடல் பாசி அவற்றின் மீது படர்ந்து, அவற்றை முற்றிலுமாக அழித்து வருகிறது. இது வனத் துறை அதிகாரிகள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.

குளிர்பானம் தயாரிக்கும் வெளிநாட்டு நிறுவனம் ஒன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் கடல் பகுதியில் இக் கடல் பாசியை தனது தொழில் வளர்ச்சிக்காக அதிக அளவில் வளர்த்து வருவதும் கண்டறியப்பட்டுள்ளது. இதனை அறிந்த ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்ட அதிகாரிகளான தில்லியைச் சேர்ந்த சீனிவாச அய்யர் தலைமையில் லியான் சாவ்லி, பெஞ்சமின், ஆந்திர மாநில தலைமை வனப் பாதுகாவலர் ஹித்தோஸ் மல்கோத்ரா, வனத் துறை அதிகாரி சின்ஹா ஆகியோர் அடங்கிய குழுவினரை ராமநாதபுரத்தில் உள்ள மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக அறக்கட்டளையின் இயக்குநர் எஸ்.பாலாஜி, வன உயிரினக் காப்பாளர் சுந்தர்ராஜன் ஆகியோர் குருசடைத் தீவுக்கு நேரில் அழைத்து வந்து காண்பித்தனர்.

பவளப் பாறைகளை வெளிநாட்டு கப்பா பைகஸ் கடல் பாசி எவ்வாறு அழித்து வருகிறது என்பதைப் பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சியுற்றனர். பவளப் பாறைகளையும், அரிய வகை கடல்வாழ் உயிரினங்களையும் வனத் துறை அதிகாரிகள் எவ்வாறு பாதுகாத்து வருகின்றனர். பவளப் பாறைகளை மேலும் அழிய விடாமல் பாதுகாப்பது குறித்தும் ஆலோசனை நடத்தினர்.

ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்ட அதிகாரிகளுடன் ராமநாதபுரத்தில் உள்ள மன்னார் வளைகுடா உயிர்க் கோள காப்பக அறக்கட்டளையின் அதிகாரிகள் தீபக் சாமுவேல், ஜெயக்குமார், வனத் துறையின் கடல் உயிரியலாளர் செந்தில்குமார் மற்றும் வனத் துறை அதிகாரிகள், வனச் சரகர்கள் பலரும் உடனிருந்தனர்.

© Copyright 2008 Dinamani

பவளப்பாறைகள் பாதிப்பால் நண்டுகளுக்கு இடமில்லை! "கப்பாபைகஸ்' ஒழிப்பை தவிர வழியில்லை

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 27,2010,22:28 IST

ராமநாதபுரம் : வெளிநாட்டு கடல்பாசியான "கப்பாபைகஸ் ஆல்வரேசி' பரவிவருவதால், நண்டுகளின் இருப்பிடங்கள் கடும் பாதிப்பை சந்தித்து, அவற்றின் உற்பத்தி பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

மாவட்டத்தில் பிரதான தொழிலாக மீன்பிடி இருந்து வருகிறது. மீனவர்களின் ஆதாரத்திற்கு கடல்வாழ் உயரினங்களின் உற்பத்தி அவசியமாகும். அந்த வகையில், கடல்வாழ் உயிரினங்களின் புகழிடமான பவளப்பாறைகளுக்கு இங்கு பெருமளவில் பாதிப்பு இருந்து வருகிறது. போதாக்குறைக்கு பாக்ஜலசந்தியில் வளர்க்கப்படும், "கப்பாபைகஸ் ஆல்வரேசி' என்ற வெளிநாட்டு கடல்பாசி மன்னார் வளைகுடாவில் பரவியது.

இதனால், பவளப்பாறைகளின் சுவாசப்பகுதிகள் செயல் இழந்து வருகின்றன. பவளப்பாறைகள் பல இடங்களில் கருகி வருகிறது. இதனால் பல்வேறு உயிரினங்கள் இருப்பிடம் இன்றி தவித்து வருகின்றன.

இதில் பெரிய அளவில் பாதிப்பை சந்தித்து வருபவை நண்டுகள் தான். குஞ்சு பொறிக்கும் நேரத்தில், ஆல்வரேசி பாசி படர்ந்து, அவை சிறை வைக்கப்படுகின்றன. பருவத்தில் அவற்றால் அங்கிருந்து வெளியேற முடியாமல் மடிந்து போகின்றன. இதனால் சமீபத்தில் நண்டுகள் இனப்பெருக்கம் பெருமளவில் குறைந்து வருகிறது. இதே போல இறால், கடல் அட்டைகளுக்கும் பாதிப்பு இருந்து வருகிறது. இப்பகுதியில் வெளிநாட்டு பாசியை பரவ செய்ததே இதற்கு காரணமாகும்.

இதை தடுக்க வேண்டிய அவசியம் தற்போது எழுந்துள்ள நிலையில், அரசு தரப்பில் இப்பாசிகளுக்கு தரப்படும் மானியங்கள், உதவிகளை நிறுத்த வேண்டும். இது குறித்து வனத்துறை மற்றும் மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பாக அறக்கட்டளை அதிகாரிகளும் மத்திய, மாநில அரசுகளின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். தவறும் பட்சத்தில், விவசாயத்தில் வறட்சிக்கு பெயர் போன ராமநாதபுரம், வருங்காலத்தில் மீன்வளத்திலும் இப்பெயரை விரிவாக்கி கொள்ளும் நிலை ஏற்படலாம்.


இலங்கை பிளாஸ்டிக் கழிவுகளா ல் தமிழகத்தி ற் கு ஆ ப த் து

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 27,2010,23:04 IST

ராமநாதபுரம்: இலங்கையின் பிளாஸ்டிக் உபயோகப் பொருட்கள் கடல் வழியாக தமிழகத்தில் கரை ஒதுங்கி, ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. சுற்றுச்சூழல் பாதிப்பில் பிளாஸ்டிக் பயன்பாடு பேராபத்தை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்த விழிப்புணர்வு, இந்திய அளவில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, கடல் வாழ் உயிரினங்களுக்கு பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஆயுட்காலம் குறைய வாய்ப்புள்ளது.


இதன் காரணமாகவே, ராமேஸ்வரம் தீவில் பிளாஸ்டிக் மீதான தடை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், அங்கு 75 சதவீதம் பிளாஸ்டிக் பயன்பாடு குறைந்துள்ளது. இந்நிலையில், இலங்கையில் கடலோரம் கொட்டப்படும் சமையல் எண்ணெய் மற்றும் குளிர்பான பாட்டில்கள், பெண்கள் பயன்படுத்தப்படும், "நாப்கின் பேட்' உறைகள், பாலித்தீன் பேப்பர்கள் போன்ற கழிவுகள், கடல் வழியாக வந்து, தமிழக கடலோர பகுதிகளில் ஒதுங்கி, சுற்றுச்சூழலை மாசுபடுத்தி வருகிறது. இதனால், பவளப்பாறைகளின் சுவாசம் பாதிக்கப்படும். மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் கரை ஒதுங்கும் அவை, அப்புறப்படுத்தப்படாததால் புதைந்து விடுகின்றன. இலங்கையின் பிளாஸ்டிக் கழிவுப் பொருட்கள், தமிழக சுற்றுச்சூழலை சீரழித்து வருவது வேதனை.


மன்னார் வளைகுடாவின் நிலையை கண்டு ஐ.நா., திட்டக்குழு வருத்த

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 26,2010,23:24 IST

ராமநாதபுரம்:"மன்னார் வளைகுடாவின் இன்றைய நிலை வருத்தம் அளிக்கும் வகையில் இருப்பதாக,' தீவுகளில் ஆய்வு செய்த ஐ.நா., வளர்ச்சி திட்டக்குழுவினர் தெரிவித்தனர். கடல்சார் உயிரினங்களை பாதுகாக்கும் பொருட்டு உலகளாவிய அளவில் யூ.என்.டி.ஏ.,(ஐக்கிய நாடுகள் வளர்ச்சி திட்டம்) செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாட்டிலும் அதற்கான பிரதிநிதிகள் மூலம், சம்மந்தப்பட்ட நாட்டின் கடல்வளத்திற்கு தேவையான நிதி உதவி செய்து வருகின்றனர். இந்தியாவில் கடல்சார் தேசிய பூங்காவான மன்னார் வளைகுடாவின் வளர்ச்சிக்கு அதற்காக செயல்படும் தமிழக அரசின் அறக்கட்டளைக்கு இம்முறை ஆறு கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளனர்.


இதற்கான ஆய்வுக்காக யூ.என்.டி.ஏ.,வின் திட்ட ஆய்வாளர்கள் சீனிவாச அய்யர், லியான் ஜவ்லி, பிரான்ஸ் நாட்டின் பெஞ்சமின் ஆகியோர் ராமநாதபுரம் வந்தனர். மன்னார் வளைகுடாவின் கடலோர பகுதிகளில் அறக்கட்டளை மூலம் மேற்கொண்டு வரும் பல்வேறு பணிகளை பார்வையிட்டனர். குருசடை தீவுக்கு சென்றவர்கள் அங்குள்ள, பவளப்பாறைகளை பார்வையிட்டனர். "கப்பாபைகஸ் ஆல்வரேசி' பாசியால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் கண்டு வருத்தம் தெரிவித்தனர். பிரான்ஸ் நாட்டின் பெஞ்சமின் கூறியதாவது: மீனவர்களுக்கு வசதியாக தான் அறக்கட்டளை மூலம் பல்வேறு திட்டங்கள் செய்து வருகிறோம். தீவுகளை சுற்றி ஒளிரும் மிதவைகள் போடுவதால், மீனவர்களுக்கு நலன் தான் உள்ளது. இது அறியாமல் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். "கப்பாபைகஸ் ஆல்வரேசி' பாசியால் பவளப்பாறைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இது வருந்தக்கூடியதாகும். இது குறித்து அரசுக்கு தெரிவிக்கப்படும். மீனவர்கள் மாற்றுத்தொழிலுக்கு அதிக நிதி ஒதுக்கி வருகிறோம். அதை அவர்கள் பயன்படுத்த வேண்டும், என்றார். அறக்கட்டளை இயக்குனர் பாலாஜி உட்பட அதிகாரிகள் பலரும் உடன் சென்றனர்.


ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து மறியல்: 10 பேர் கைது

24 Aug 2010 01:44:53 PM IST

ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து மறியல்: 10 பேர் கைது


தூத்துக்குடி, ஆக. 23: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எதிராக மறியலில் ஈடுபட்டதாக 10 பேர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்ட ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக் குழுவினர் சார்பில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு வந்த போராட்டக் குழுவினர் திடீரென தூத்துக்குடி- பாளையங்கோட்டை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இந்த மறியலுக்கு போராட்டக் குழு தலைவரும், தாமிரபரணி நதிநீர்பாதுகாப்பு பேரவை அமைப்பாளருமான எஸ். நயினார் குலசேகரன் தலைமை வகித்தார்.
நாம் தமிழர் இயக்க அமைப்பாளர் பிரபு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் அ. மோகன்ராஜ், மாதர் சங்க நிர்வாகி மடோனாள், மக்கள் உரிமைக் கழக அமைப்பாளர் அதிசயகுமார், கடலோர மக்கள் கூட்டமைப்பு அமைப்பாளர் புஷ்பராயன், வீராங்கனை அமைப்பின் அமைப்பாளர் பேராசிரியை பாத்திமா பாபு, ம.தி.மு.க.வைச் சேர்ந்த நக்கீரன், மகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில், நயினார் குலசேகரன், வழக்கறிஞர் பிரபு, பாத்திமா பாபு உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

தமிழக சட்ட மேலவையில் மீனவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்ககோரி

கடலோர மக்கள் கூட்டமைப்பு

11/106 B, கேப்டன் காம்பவுண்ட்,

ஆரோக்கியபுரம் மெயின் ரோடு,

தூத்துக்குடி-628002


தேதி : 28.08.2010

பெறுநர்

மாண்புமிகு.தமிழக முதல்வர் அவர்கள்,

தலைமை செயலகம்,

சென்னை.

மதிப்புமிகு ஐயா,

பொருள்: தமிழக சட்ட மேலவையில் மீனவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்ககோரி.

வணக்கம்! தமிழகத்தில் சுமார் 30 லட்சம் பேர் மீனவர்களாகவும் மீன்பிடி சார்ந்த தொழிலிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

நாட்டுபடகு மீனவர்கள்,விசைப்படகு மீனவர்கள், மீன்பிடித் தொழிலாளர்கள் உள்ளிட்ட கடல்சார் தொழிலிலும்,உள்நாட்டு மீன்பிடித்தலிலும் ஈடுபட்டுவரும் மீனவ மக்களுக்கு உரிய அரசியல் அங்கிகாரம் இதுவரை வழங்கப்படவில்லை.

தமிழகத்தில் 13 கடலோர மாவட்டங்களிலும் பிறமாவட்டங்களில் உள்நாட்டு மீன்பிடிப்பில் ஈடுபட்டுவரும் மீனவர்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளிலும்,சட்டபேரவையிலும்,மக்களவை,மாநிலங்களவையிலும் பிரதிநிதித்துவம் கிடையாது.

தமிழகத்தின் மொத்த சட்டமன்றத் தொகுதிகளில் 2 அல்லது 3 நபர்கள் அரசியல் கட்சிகளின் சார்பில் சட்டபேரவை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.அவர்களும் கட்சிகளின் தலைமைக்கு கட்டுப்பட்டு செயல்பட வேண்டியுள்ளது.ஒரேஒரு நபர் மீனவ சமுகத்திலிருந்து ஆளுங்கட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர் மீன்வளத்துறைக்கு அமைச்சராக்கப்படுகின்றார்.அவர்களால் அடித்தட்டு மீனவர்களின் பிரச்சனைகளை பொதுஅரங்குகளில் எடுத்துச்சொல்ல வாய்ப்பில்லாமல் போய்விடுகின்றது.

தற்போதைய சட்டைப்பேரவை உறுப்பினர்களில் ஆளுங்கட்சி தரப்பில் மீன்வளத்துறை அமைச்சர் மாண்புமிகு கே.பி.பி.சாமி அவர்களும்,எதிர்கட்சி சார்பில் முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் மாண்புமிகு ஜெயக்குமார் அவர்களும் மீனவ சமூகத்தின் பிரதிநிதிகளாக உள்ளனர்.அவர்கள் இருவரும் சென்னையைச் சேர்ந்தவர்கள்.

திராவிட கட்சிகள் இதுவரை மீனவர்களை ஓட்டு வங்கிகளாக மட்டுமே பயன்படுத்தி வந்துள்ளனர்.வேறு எவ்விதத்திலும் மீனவ மக்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவம் வழங்கவில்லை.உள்ளாட்சி அமைப்புகளில் கடற்கரையோர கிராமங்களில் மட்டும் ஒருசிலர் ஊராட்சி மன்றத் தலைவர்களாக வந்துள்ளனர்.

28.09.1997-ல் நாடாளுமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட முராரி கமிட்டி பரிந்துரைகள்,06.08.1990-ல் அறிவிக்கப்பட்ட மண்டல் கமிஷன் பரிந்துரைகள் மற்றும் 1982 மண்டைக்காடு கலவரத்திற்க்காக ஏற்ப்படுத்தப்பட்ட வேணு கோபால் கமிஷன் அறிக்கைகள் மீனவர்களுக்கு உள்ளாட்சி முதல் நாடாளுமன்றம் வரை உரிய பிரதிநிதித்துவம் கொடுக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.இது வரை இந்தியாவில் எந்த கடலோர மாநிலங்களிலும் இவ்வறிக்கைகள் அமல்படுத்தப்படவில்லை

இந்த சூழ்நிலையில் மீனவமக்களின் தேவைகளை, குறைகளை, பிரச்சனைகளை முழுமையாக கருத்துத் தெரிவிக்கும் வகையில் பிரதிநிதிகளை தமிழக சட்ட மேலவையில் ஏற்ப்படுத்திடவேண்டும்.

மீனவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம்,அரசியல் அங்கிகாரம் கிடைத்திட தமிழகத்தில் அமைக்கப்பட உள்ள சட்டமேலவையில் மீனவமக்களுக்கு 10 சதவிகித தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.

மீனவர்களுக்கான பிரதிநிதித்துவம் என்பது அரசியல்கட்சி சார்பற்று வழங்கப்பட வேண்டும்.மீனவ சமுகத்தினை சேர்ந்த தொழிலதிபர்கள் அல்லாத பாரம்பரிய மீனவர்களுக்கும்,பாரம்பரிய நாட்டுப்படகு மீனவ சங்கங்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.

இப்படிக்கு,

ம.ச.புஷ்பராயன்

அமைப்பாளர்,

கடலோர மக்கள் கூட்டமைப்பு.

NO: 9842154073

Posted by Picasa
Posted by Picasa
Posted by Picasa
Posted by Picasa
Posted by Picasa
Posted by Picasa
Posted by Picasa

CPF CONVENER addressing the Media after the Public Hearing for TUTY PORT EXPANSION on 16 .07.2010

Posted by Picasa

மன்னார் வளைகுடாவின் நிலையை கண்டு ஐ.நா., திட்டக்குழு வருத்தம்

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 26,2010,23:24 IST

ராமநாதபுரம்:"மன்னார் வளைகுடாவின் இன்றைய நிலை வருத்தம் அளிக்கும் வகையில் இருப்பதாக,' தீவுகளில் ஆய்வு செய்த ஐ.நா., வளர்ச்சி திட்டக்குழுவினர் தெரிவித்தனர். கடல்சார் உயிரினங்களை பாதுகாக்கும் பொருட்டு உலகளாவிய அளவில் யூ.என்.டி.ஏ.,(ஐக்கிய நாடுகள் வளர்ச்சி திட்டம்) செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாட்டிலும் அதற்கான பிரதிநிதிகள் மூலம், சம்மந்தப்பட்ட நாட்டின் கடல்வளத்திற்கு தேவையான நிதி உதவி செய்து வருகின்றனர். இந்தியாவில் கடல்சார் தேசிய பூங்காவான மன்னார் வளைகுடாவின் வளர்ச்சிக்கு அதற்காக செயல்படும் தமிழக அரசின் அறக்கட்டளைக்கு இம்முறை ஆறு கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளனர்.


இதற்கான ஆய்வுக்காக யூ.என்.டி.ஏ.,வின் திட்ட ஆய்வாளர்கள் சீனிவாச அய்யர், லியான் ஜவ்லி, பிரான்ஸ் நாட்டின் பெஞ்சமின் ஆகியோர் ராமநாதபுரம் வந்தனர். மன்னார் வளைகுடாவின் கடலோர பகுதிகளில் அறக்கட்டளை மூலம் மேற்கொண்டு வரும் பல்வேறு பணிகளை பார்வையிட்டனர். குருசடை தீவுக்கு சென்றவர்கள் அங்குள்ள, பவளப்பாறைகளை பார்வையிட்டனர். "கப்பாபைகஸ் ஆல்வரேசி' பாசியால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் கண்டு வருத்தம் தெரிவித்தனர். பிரான்ஸ் நாட்டின் பெஞ்சமின் கூறியதாவது: மீனவர்களுக்கு வசதியாக தான் அறக்கட்டளை மூலம் பல்வேறு திட்டங்கள் செய்து வருகிறோம். தீவுகளை சுற்றி ஒளிரும் மிதவைகள் போடுவதால், மீனவர்களுக்கு நலன் தான் உள்ளது. இது அறியாமல் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். "கப்பாபைகஸ் ஆல்வரேசி' பாசியால் பவளப்பாறைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இது வருந்தக்கூடியதாகும். இது குறித்து அரசுக்கு தெரிவிக்கப்படும். மீனவர்கள் மாற்றுத்தொழிலுக்கு அதிக நிதி ஒதுக்கி வருகிறோம். அதை அவர்கள் பயன்படுத்த வேண்டும், என்றார். அறக்கட்டளை இயக்குனர் பாலாஜி உட்பட அதிகாரிகள் பலரும் உடன் சென்றனர்.


ராமநாதபுரம் பாணியில் ஆந்திராவில் நடைமுறை:ராமநாதபுரத்தில் மன்னார் வளைகுடா அறக்கட்டளை மூலம் மேற்கொள்ளப்படும் பணிகளை போல, ஆந்திர கடலோர பகுதிகளிலும் யூ.என்.டி.ஏ., மூலம் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்காக அம்மாநிலத்தின் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் சின்கா தலைமையிலான வனத்துறையினர் நேற்று ஆய்வில் பங்கேற்றனர். "இங்கு செயல்படுத்தப்படும் திட்டங்களை அறிந்து , அங்கு நடைமுறைப்படுத்தப்போவதாக,' அவர்கள் தெரிவித்தனர். சென்று.


பவளப்பாறைகள் பாதிப்பால் நண்டுகளுக்கு இடமில்லை! "கப்பாபைகஸ்' ஒழிப்பை தவிர வழியில்லை

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 27,2010,22:28 IST

ராமநாதபுரம் : வெளிநாட்டு கடல்பாசியான "கப்பாபைகஸ் ஆல்வரேசி' பரவிவருவதால், நண்டுகளின் இருப்பிடங்கள் கடும் பாதிப்பை சந்தித்து, அவற்றின் உற்பத்தி பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

மாவட்டத்தில் பிரதான தொழிலாக மீன்பிடி இருந்து வருகிறது. மீனவர்களின் ஆதாரத்திற்கு கடல்வாழ் உயரினங்களின் உற்பத்தி அவசியமாகும். அந்த வகையில், கடல்வாழ் உயிரினங்களின் புகழிடமான பவளப்பாறைகளுக்கு இங்கு பெருமளவில் பாதிப்பு இருந்து வருகிறது. போதாக்குறைக்கு பாக்ஜலசந்தியில் வளர்க்கப்படும், "கப்பாபைகஸ் ஆல்வரேசி' என்ற வெளிநாட்டு கடல்பாசி மன்னார் வளைகுடாவில் பரவியது.

இதனால், பவளப்பாறைகளின் சுவாசப்பகுதிகள் செயல் இழந்து வருகின்றன. பவளப்பாறைகள் பல இடங்களில் கருகி வருகிறது. இதனால் பல்வேறு உயிரினங்கள் இருப்பிடம் இன்றி தவித்து வருகின்றன.

இதில் பெரிய அளவில் பாதிப்பை சந்தித்து வருபவை நண்டுகள் தான். குஞ்சு பொறிக்கும் நேரத்தில், ஆல்வரேசி பாசி படர்ந்து, அவை சிறை வைக்கப்படுகின்றன. பருவத்தில் அவற்றால் அங்கிருந்து வெளியேற முடியாமல் மடிந்து போகின்றன. இதனால் சமீபத்தில் நண்டுகள் இனப்பெருக்கம் பெருமளவில் குறைந்து வருகிறது. இதே போல இறால், கடல் அட்டைகளுக்கும் பாதிப்பு இருந்து வருகிறது. இப்பகுதியில் வெளிநாட்டு பாசியை பரவ செய்ததே இதற்கு காரணமாகும்.

இதை தடுக்க வேண்டிய அவசியம் தற்போது எழுந்துள்ள நிலையில், அரசு தரப்பில் இப்பாசிகளுக்கு தரப்படும் மானியங்கள், உதவிகளை நிறுத்த வேண்டும். இது குறித்து வனத்துறை மற்றும் மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பாக அறக்கட்டளை அதிகாரிகளும் மத்திய, மாநில அரசுகளின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். தவறும் பட்சத்தில், விவசாயத்தில் வறட்சிக்கு பெயர் போன ராமநாதபுரம், வருங்காலத்தில் மீன்வளத்திலும் இப்பெயரை விரிவாக்கி கொள்ளும் நிலை ஏற்படலாம்.


Friday, August 27, 2010

இந்தியக் கடல் வளத்தை அழிக்கும் வெளிநாட்டு கடல்பாசி: குருசடைத் தீவில் அதிகாரிகள் குழு ஆய்வு

27 Aug 2010 12:45:40 PM IST

இந்தியக் கடல் வளத்தை அழிக்கும் வெளிநாட்டு கடல்பாசி: குருசடைத் தீவில் அதிகாரிகள் குழு ஆய்வு

ராமநாதபுரம், ஆக. 26: இந்தியாவில் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் அரியவகை கடல் வாழ் உயிரினங்களின் புகழிடமாக விளங்கும் பவளப் பாறைகளை கப்பா பைகஸ் எனும் வெளிநாட்டு கடல்பாசி அழித்து வருவதை ராமநாதபுரம் அருகேயுள்ள குருசடைத் தீவில் ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்ட அதிகாரிகள் குழுவினர் வியாழக்கிழமை நேரில் ஆய்வுசெய்து, அதிர்ச்சியடைந்தனர்.

இந்தியக் கிழக்கு கடற்கரையில் ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் தீவிலிருந்து

கன்னியாகுமரி வரை பரவிக் காணப்படும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 21 சிறு பவளப் பாறைத் தீவுகள் உள்ளன. உலகிலேயே வேறு எங்கும் இல்லாத வகையில் இப் பகுதியில் அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள் சுமார் 3,600-க்கும் மேற்பட்டவை உயிர் வாழ்கின்றன. இவ் உயிரினங்களின் வளர்ச்சிக்கு

பவளப் பாறைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. எனவேதான், இப் பகுதியை மத்திய அரசு தேசிய கடற் பூங்காவாக அறிவித்து, இப் பகுதியைப் பாதுகாத்து வருகிறது.

வெடி வைத்துத் தகர்ப்பது, கழிவு நீர் கடலில் கலப்பது, எண்ணெய்க் கசிவு நீர் மற்றும் ரசாயனக் கழிவுகளால்தான் பெரும்பாலும் கடல் வளம் அழிய வாய்ப்புண்டு. ஆனால், தற்போது இக் கடல் பகுதியில் காணப்படும் பவளப் பாறைகள் எனப்படும் உயிரினங்களை பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து கடல் வழியாக ஊடுருவியுள்ள கப்பா பைகஸ் எனப்படும் கடல் பாசி அவற்றின் மீது படர்ந்து, அவற்றை முற்றிலுமாக அழித்து வருகிறது. இது வனத் துறை அதிகாரிகள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.

குளிர்பானம் தயாரிக்கும் வெளிநாட்டு நிறுவனம் ஒன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் கடல் பகுதியில் இக் கடல் பாசியை தனது தொழில் வளர்ச்சிக்காக அதிக அளவில் வளர்த்து வருவதும் கண்டறியப்பட்டுள்ளது. இதனை அறிந்த ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்ட அதிகாரிகளான தில்லியைச் சேர்ந்த சீனிவாச அய்யர் தலைமையில் லியான் சாவ்லி, பெஞ்சமின், ஆந்திர மாநில தலைமை வனப் பாதுகாவலர் ஹித்தோஸ் மல்கோத்ரா, வனத் துறை அதிகாரி சின்ஹா ஆகியோர் அடங்கிய குழுவினரை ராமநாதபுரத்தில் உள்ள மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக அறக்கட்டளையின் இயக்குநர் எஸ்.பாலாஜி, வன உயிரினக் காப்பாளர் சுந்தர்ராஜன் ஆகியோர் குருசடைத் தீவுக்கு நேரில் அழைத்து வந்து காண்பித்தனர்.

பவளப் பாறைகளை வெளிநாட்டு கப்பா பைகஸ் கடல் பாசி எவ்வாறு அழித்து வருகிறது என்பதைப் பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சியுற்றனர். பவளப் பாறைகளையும், அரிய வகை கடல்வாழ் உயிரினங்களையும் வனத் துறை அதிகாரிகள் எவ்வாறு பாதுகாத்து வருகின்றனர். பவளப் பாறைகளை மேலும் அழிய விடாமல் பாதுகாப்பது குறித்தும் ஆலோசனை நடத்தினர்.

ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்ட அதிகாரிகளுடன் ராமநாதபுரத்தில் உள்ள மன்னார் வளைகுடா உயிர்க் கோள காப்பக அறக்கட்டளையின் அதிகாரிகள் தீபக் சாமுவேல், ஜெயக்குமார், வனத் துறையின் கடல் உயிரியலாளர் செந்தில்குமார் மற்றும் வனத் துறை அதிகாரிகள், வனச் சரகர்கள் பலரும் உடனிருந்தனர்.

© Copyright 2008 Dinamani

இலங்கை சிறையில் வதைபடும் மீனவர்கள்

By அ. அருள்தாசன்
27 Aug 2010 12:17:18 PM IST

இலங்கை சிறையில் வதைபடும் மீனவர்கள்

நாகர்கோவில், ஆக.26: இலங்கை சிறைகளில் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் பலர் கேட்பாரியின்றி கைதிகளாக அடைப்பட்டுள்ளதாக மீனவர் அமைப்புகள் நீண்ட நாள்களாகவே கவலையடைந்துள்ளனர்.

மாவட்ட நிர்வாகமோ, அரசோ நடவடிக்கை எடுக்காமல் உள்ளதாக பரவலாக கருத்து நிலவுகிறது.

நீண்ட கடற்பகுதியைக் கொண்ட குமரி மாவட்டத்தில் 43 கடலோரக் கிராமங்களிலும் இதுபோன்று கடலில் மீனவர்கள் காணாமல் போகும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுகிறது.

கடலில் ஏற்படும் பருவநிலை மாற்றங்களில் சிக்கியும், விபத்துகளாலும் மீனவர்கள் காணாமல்போவது ஒருபுறம் இருக்க அண்டை நாடான இலங்கை கடற்படையால் பிடித்துச் செல்லப்படுவது மீனவர்கள் மாயமாவதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

ஆனால் ஆழ்கடல் பகுதியில் பிடிபடும் மீனவர்கள் குறித்து தகவல் தெரிவிக்காமல் அவர்களை பிடித்துச் சென்று இலங்கை சிறைகளில் அடைத்து வைத்திருப்பதாக மீனவர் அமைப்புகள் தகவல் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு ராமேசுவரம் தங்கச்சிமடம் பகுதியில் நடைபெற்ற மாநில அளவிலான மீனவர் வாழ்வுரிமை மாநாட்டின் ஒரு பகுதியாக பொதுவிசாரணை மன்றத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் இலங்கை கடற்படையால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் பலரை அழைத்து ஓய்வுபெற்ற நீதிபதிகள் கொண்ட குழுவினர் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையின் போது இலங்கை சிறையில் அடைபட்டு பின்னர் சொந்த ஊருக்கு திரும்பியிருக்கும் மீனவர்கள் பலர் வெளியிட்ட தகவல்கள் கன்னியாகுமரி மாவட்ட மீனவர் அமைப்புகளின் நிர்வாகிகளின் கருத்தை உறுதிசெய்வதாக இருந்தது.

இலங்கை சிறைகளில் எவ்வித விசாரணையும் இன்றி,கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் பலர் கைதிகளாக அடைபட்டுள்ளதாக பொதுவிசாரணை மன்றத்தில் மீனவர்கள் பலர் தெரிவித்தனர்.

இலங்கை சிறைகளில் விசாரணையின்றி கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் கைதிகளாக இருக்கிறார்களா என்பதை கண்டறிய இருநாட்டு தூதரகங்கள் மூலம் முயற்சி மேற்கொள்ள மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார் நெய்தல் மக்கள் இயக்க தலைவர் குறும்பனை சி. பெர்லின். பொதுவிசாரணை நிகழ்வில் இவரும் பங்கேற்றிருந்தார்.

2008-ம் ஆண்டிலேயே இந்த பிரச்னை குறித்து அப்போதைய மாவட்ட ஆட்சியர் ஜோதிநிர்மலாவிடம் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. உயரதிகாரிகளுக்கு தெரிவித்து மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவும் அவர் முற்பட்டார்.

ஆனால் அவரை இடமாற்றம் செய்தபின் தொடர்ந்து வந்த ஆட்சியர்கள் இதில் அக்கறை செலுத்தவில்லை என்றார் பெர்லின்.

1987-ம் ஆண்டு முதல் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து மட்டும் 88 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றபோது காணாமல் போயுள்ளனர் அல்லது இறந்துள்ளனர் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இறந்தவர்கள் என்று கருதப்படும் மீனவர்கள் பலரின் உடல் கிடைக்கவில்லை. விசைப்படகுகளில் ஆழ்கடல் பகுதிகளுக்குச் சென்று மீன்பிடிக்க சென்ற காலம் தொடங்கி மீனவர்கள் காணாமல்போகும் சம்பவங்களும் அவ்வப்போது நடந்து கொண்டிருக்கின்றன.

அவ்வாறு காணாமல்போகும் மீனவர்களைத் தேடும் பணி அதிகபட்சம் ஒரு வாரம் வரைநடக்கிறது. அதன்பின் அந்த மீனவர்கள் கதி என்ன என்பது குறித்து யாருக்கும் தெரியாமல் போய்விடுகிறது.

காணாமல்போகும் மீனவர்களது குடும்பங்களுக்கு ஆறுதல் கூறச் செல்லும் அரசியல்வாதிகளும், ஆட்சியாளர்களும் அதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் தடுக்கும் யோசனைகளை செயல்படுத்த முன்வரவில்லை.

இலங்கை சிறைகளில் உண்மையிலேயே மாவட்ட மீனவர்கள் விசாரணையில்லாத கைதிகளாக அடைபட்டுள்ளார்களா என்பதை தெளிவுபடுத்த மத்திய, மாநில அரசுகள் இருநாட்டு தூதரகங்கள் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களின் கோரிக்கை.

© Copyright 2008 Dinamani

Tuesday, August 24, 2010

Thursday, August 19, 2010

மாண்புமிகு . வனத்துறை அமைச்சர் அவர்கள்,இந்திய கடலில் தமிழக மீனவர்களுக்கு எல்லை போடும் மிதவைகள் அமைக்கும் திட்டத்தை முற்றிலும் கைவிடக்கோரி

கடலோர மக்கள் கூட்டமைப்பு

19 /1 - மனுவேல் ஜேக்கப் லேன், தூத்துக்குடி - 1

தொலைபேசி : 0461 2361699

அலைபேசி : 98421 54073, மின் அஞ்சல் : cpfsouth@gmail.com


நாள் : 29.07.10

பெறுனர்,

மாண்புமிகு . வனத்துறை அமைச்சர் அவர்கள்,

தமிழ்நாடு அரசு.

மதிப்புமிகு ஐயா,

(பொருள்: இந்திய கடலில் தமிழக மீனவர்களுக்கு எல்லை போடும் மிதவைகள் அமைக்கும் திட்டத்தை முற்றிலும் கைவிடக்கோரி )

வணக்கம் ! மன்னார் வளைகுடா கடலை நம்பி இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மீனவ மக்கள் வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.

மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பகம் என, கடல் வள தேசிய பூங்கா என அறிவிக்கும் முன்பிருந்தே கடல்வளத்தை பாதுகாத்து, பயன்படுத்தி வருகின்றனர் மீனவ மக்கள்.

மன்னார் வளைகுடா கடல் பகுதியிலுள்ள 21 தீவுகளில் சிலவற்றில் மீனவ மக்கள் கால்நடைகள் வளர்த்து வந்ததோடு, தங்கள் குடியிருப்பினையும் அமைத்து வந்துள்ளனர்.

பாரம்பரிய மீன்பிடித்தல் முறைகள் மூலம் நாட்டுப்படகு மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தினை பெருக்கி வருகின்றனர்.

மன்னார் வளைகுடாவுக்கு உள்பட்டகீழக்கரை, ஏர்வாடி,பெரியபட்டணம், முத்துப்பேட்டை, முந்தல், வாலிநோக்கம் ஆகிய கடல் பகுதிகளில் ஏராளமான மீனவர்கள் கடல் பாசி சேகரிக்கும் தொழில் செய்து வருகின்றனர். இந்தப் பகுதியில் பாரம்பரிய, இயற்கை முறையில் வளரும் பாசிகளை சேகரம் செய்து மீனவ பெண்கள் தங்களது வருமானத்தினை ஈட்டி வருகின்றனர். பாரம்பரிய மீனவ மக்களின் செயல்பாடுகள் எவ்வித பாதிப்புகளையும் கடல் வளத்திருக்கோ, பல்லுயிர் சூழலுக்கோ ஏற்படுத்தியதில்லை.

அரசு விதிகளுக்கு மாறாக எவ்வித சட்ட விரோத செயல்பாடுகளிலும் பாரம்பரிய, நாட்டுப் படகு மீனவர்கள் ஈடுபட்டதில்லை.

மத்திய அரசின் டேக்ராடுன் வன உயிரின நிறுவனத்தின் ஆய்வறிக்கைபடி மன்னார் வளைகுடா கடல் வளம் குன்றி வருவதற்கும், உயிரினங்கள் அழிவதற்கும் தொழிற்சாலைகளும், துறைமுகம் சார்ந்த கழிவுகளும், இறால் பண்ணைகள் அமைப்பதும்தான் என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பக வரைவு மேலாண்மை அறிக்கை மீனவ மக்களுடனோ, மீனவ பிரதிநிதிகள் உடனோ, மீனவ அமைகளுடனோ கலந்து ஆலோசிக்காமல், மக்கள் கருத்து கேட்காமல் உருவாக்கப்பட்டுள்ளது.

தீவுகளை சுற்றி போயா மிதவைகள் அமைத்து விட்டால் பாரம்பரிய நாட்டுப் படகு மீனவர்கள் மீன்பிடித்தலுக்கும், வலைகள் விடுவதற்கும் இயலாத சூழ்நிலையில் இரண்டு லட்சம் மீனவ மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தினை இழந்து நிற்க வேண்டிய அவல நிலை ஏற்படும்.

மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பக பகுதியில் மீன் பிடிப்பதற்கும், பாரம்பரிய முறையில் பாசி எடுப்பதற்கும் தடை விதிக்கப்பட்டால் மீனவர்கள் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும்.

கடல் வளத்தினையும், பல்லுயிர் சூழலினையும் பாரம்பரிய மீனவ மக்களால் மட்டுமே பாதுகாத்து வளப்படுத்த முடியுமே தவிர, ஒரு சில அதிகாரிகளால் பாதுகாப்பது என்பது இயலாத காரியம்.

அன்னியர்கள் நடமாட்டத்தினையும், கடத்தல் சம்பவங்களையும், வெளிநாட்டு கப்பல் ஊடுருவலையும் அரசுக்கும், இந்திய கடற்படைக்கும் முதலில் அறிவிப்பது, அறிவித்தது மீனவ மக்கள்தான்.

இரண்டு லட்சம் மீனவ மக்கள் கடல் தொழிலில் ஈடுபட்டால் மட்டுமே தேசிய பாதுகாப்பு அடிப்படையிலும் நாட்டைப் பாதுகாக்க முடியும்.

மீனவர்களை புறக்கணித்து விட்டு, மீனவ மக்களை கடலிலிருந்தும், கடற்கரையிலிருந்தும் அந்நியப்படுத்தி விட்டு கடல் வளத்தையும், நாட்டின் பாதுகாப்பையும் நிலை நிறுத்துவது கடினமான சூழலை அரசுக்கு உருவாக்கும்.

மன்னார் வளைகுடா தீவுகள் கடற்கரைப் பகுதியில் இருந்து குறைந்த தூரத்தில்தான் அமைந்துள்ளது. இப்பகுதியில் போயா மிதவைகள் அமைக்கப்பட்டு எல்லை உருவாக்கப்பட்டால் மீனவர்கள் தீவுகளைத் தாண்டி மீன்பிடிக்க செல்ல வேண்டும். அப்போது எரிபொருள் அதிகம் செலவாகி பொருளாதார இழப்பு ஏற்படுவதோடு, மீனவர்களின் உயிருக்கு உத்திரவாதமற்ற நிலை ஏற்படும்.

மிதவைகள் அமைக்கப்பட்டால் புயல் உள்ளிட்ட பேரிடர் காலங்களிலும், படகு பழுது, அதிக காற்று உள்ளிட்ட அசாதாரண சூழல் உருவாகும் போதும் மீனவர்கள் திக்கற்றவர்களாக நிற்க வேண்டி வரும்.

இலங்கை கடற்படையால் கடலில் எல்லை வகுக்கப்பட்டு உயிருக்கும், உணவிற்கும் போராடி வரும் இந்த நிலையில் இந்திய அரசும், மாநில வனத்துறையும் உள்நாட்டு கடலில் எல்லை வகுத்து தடை செய்தால் மீனவ மக்களின் பிழைப்பு அரிதாகிவிடும்.

கட்ச தீவு உடன்பாட்டிலேயே இந்திய, இலங்கை மீனவர்கள் அத்தீவில் சென்றுவர, வலைகள் உலர்த்த, மீன்பிடிக்க உரிமை அளிக்கப்பட்ட நிலையில் இந்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இருபத்தோரு தீவுகளிலும் தமிழ் மீனவர்களுக்கு அடிப்படை உரிமை மறுக்கப்படுவது மனிதாபிமான அடிப்படையில் சிந்திக்க வேண்டிய செயலாகும்.

தீவுகளில் இருந்து மீனவ மக்களை அந்நியப்படுத்தி விட்டால் கடல் சார்ந்த சமூக விரோத செயல்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. தீவுகளின் வளங்கள் கொள்ளையடிக்கப்பட வாய்ப்பு உள்ளது. எனவே தீவுகளை பாதுகாக்க மக்கள் உடன் இணைந்து அரசு செயலாற்ற வேண்டுமென மீனவ மக்கள் விரும்புகின்றனர்.

தீவுகளைப் பாதுகாக்கும், கடல் வளப் பாதுகாப்பு மற்றும் மேலாண்மைத் திட்டங்கள் மீனவ மக்கள் கருத்தறிந்து, மீனவ மக்கள் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் அரசு நிறைவேற்ற வேண்டும்.

தீவுகளில் மிதவைகள் போட்டு எல்லை வகுத்துவிட்டால் அது மீனவ மக்களின் வாழ்வை சிதைக்கும் செயலாகவே அமைந்து விடும்.

ஆகவே, மாண்புமிகு வனத்துறை அமைச்சர் அவர்கள் கடலுக்குள் எல்லை வகுத்து மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும், மிதவைகள் அமைக்கும் திட்டத்தை முற்றிலும் கைவிட பரிந்துரை செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இப்படிக்கு

( ம. புஷ்பராயன் ),

அமைப்பாளர், கடலோர மக்கள் கூட்டமைப்பு,

ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள்.