Tuesday, June 15, 2010
HINDU Reports on 6th June , 2010 about Country boat fishermen stage protest
Date:06/06/2010 URL: http://www.thehindu.com/2010/06/06/stories/2010060658710300.htm
Back
Tamil Nadu - Tuticorin
Country boat fishermen stage protest
Madurai Bureau
Against decision of forest authorities to float buoys
. — Photos: L. BALACHANDAR AND N. Rajesh
UP IN ARMS:Fisherfolk observing a fast at Kilakarai in Ramanathapuram district on Saturday. (Right) Black flags raised on country boats on Threspuram beach in Tuticorin
Tuticorin: Fishermen using country boats in the coastal areas of Tuticorin district did not venture into the sea on Saturday in protest against the decision of forest authorities to float buoys along the 21 islands in the Gulf of Mannar. Black flags were hoisted on the boats as a mark of protest. Over 200 boats did not venture into the sea.
Fishermen from of Vembar, Keezhavaippar, Sippikulam, Pattinamaruthur, Tharuvaikulam, Vellapatti, Thalamuthu Nagar, Vivekanadan Nagar, Puthia Kadarkarai, New Harbour, Inigo Nagar and Threspuram participated in the agitation.
Ramanathapuram
Fishermen owing allegiance to the Ramanathapuram Fishermen Trade Union (RFTU) observed a token fast at Kilakarai in Ramanathapuram district.
P.M. Karuppaiah, vice-president, Thiruppullani block, presided over the agitation. Palchamy, district president, and other leaders of the union spoke. More than 700 members took part in the protest staged near the Forest Range office in Kilakarai.
The protesters claimed that the decision of the State government to float buoys would prevent country boat fishermen from fishing near the islands. It would restrict their movement around the islands. The livelihood of the fishermen would be in jeopardy if the government went ahead with the proposal. They would not allow the authorities to float the buoys, the protesters said.
© Copyright 2000 - 2009 The Hindu
Back
Tamil Nadu - Tuticorin
Country boat fishermen stage protest
Madurai Bureau
Against decision of forest authorities to float buoys
. — Photos: L. BALACHANDAR AND N. Rajesh
UP IN ARMS:Fisherfolk observing a fast at Kilakarai in Ramanathapuram district on Saturday. (Right) Black flags raised on country boats on Threspuram beach in Tuticorin
Tuticorin: Fishermen using country boats in the coastal areas of Tuticorin district did not venture into the sea on Saturday in protest against the decision of forest authorities to float buoys along the 21 islands in the Gulf of Mannar. Black flags were hoisted on the boats as a mark of protest. Over 200 boats did not venture into the sea.
Fishermen from of Vembar, Keezhavaippar, Sippikulam, Pattinamaruthur, Tharuvaikulam, Vellapatti, Thalamuthu Nagar, Vivekanadan Nagar, Puthia Kadarkarai, New Harbour, Inigo Nagar and Threspuram participated in the agitation.
Ramanathapuram
Fishermen owing allegiance to the Ramanathapuram Fishermen Trade Union (RFTU) observed a token fast at Kilakarai in Ramanathapuram district.
P.M. Karuppaiah, vice-president, Thiruppullani block, presided over the agitation. Palchamy, district president, and other leaders of the union spoke. More than 700 members took part in the protest staged near the Forest Range office in Kilakarai.
The protesters claimed that the decision of the State government to float buoys would prevent country boat fishermen from fishing near the islands. It would restrict their movement around the islands. The livelihood of the fishermen would be in jeopardy if the government went ahead with the proposal. They would not allow the authorities to float the buoys, the protesters said.
© Copyright 2000 - 2009 The Hindu
Times of India News Clipping dated 31.05.2010 ,Country boat fishermen to protest on June 5
Publication: The Times Of India Chennai; Date: May 31, 2010; Section: Times Region; Page: 6
REGION DIGEST
Country boat fishermen to protest on June 5
As a mark of protest against the move to promote ecotourism in 21 islands in the Gulf of Mannar, fishermen using country boats in Ramanathapuram and Thoothukudi will not venture into the sea on June 5. They will hold a fast against the move which would prevent fishermen from going near the islands for fishing as part of the ecotourism programme. M Pushparayan, convenor of the the Coastal People’s Federation, said the move of the Gulf of Mannar Biosphere Reserve Trust to ban fishing in the islands from the first week of June was infringing on the rights of the fishermen and it would affect their livelihood. Ramanathapuram traditional country boat fishermen’s association president A Paul Samy said the administration had decided to mark of the marine park near the islets with buoys. The sea beyond these points is just slush and mud and the 20,000 country boat fishermen who are already facing hardships would be affected further, he said.
REGION DIGEST
Country boat fishermen to protest on June 5
As a mark of protest against the move to promote ecotourism in 21 islands in the Gulf of Mannar, fishermen using country boats in Ramanathapuram and Thoothukudi will not venture into the sea on June 5. They will hold a fast against the move which would prevent fishermen from going near the islands for fishing as part of the ecotourism programme. M Pushparayan, convenor of the the Coastal People’s Federation, said the move of the Gulf of Mannar Biosphere Reserve Trust to ban fishing in the islands from the first week of June was infringing on the rights of the fishermen and it would affect their livelihood. Ramanathapuram traditional country boat fishermen’s association president A Paul Samy said the administration had decided to mark of the marine park near the islets with buoys. The sea beyond these points is just slush and mud and the 20,000 country boat fishermen who are already facing hardships would be affected further, he said.
COASTAL PEOPLE’S FEDERATION
CPF PRESS MEET – RAMANATHAPURAM & THOOTHUKUDI 28.05.2010 - 11 AM.
Conservation or Commercialisation?
CPF is against GOMBRT Director Aruna Basu Sarkar’s recent move /announcement to ban fishing in GOM islands from June first week onwards and opening up entry for tourists to visit 21 coral islands.
CPF questions and doubts very seriously of the real motive of GOMBRT Director whether she wants to conserve the biodiversity and ecosystem of the GOM region or to destroy it permanently by permitting tourism or other developmental activities into the islands.
The fishers and the coastal communities down the centuries have been protecting biodiversity of the GOM region even before the nation or Government could realize the uniqueness of the region and enacting the subsequent laws to protect the same.
The Government recently is coming forward in this 21st century with management plans or projects which really have disturbed the web of life in the GOM ecosystem. (INDO NORWEGION Fishing Technology, Mechanisation of boats, Coral Mining ,Industrialisation , Sand mining , Sethu Samudram Ship Canal project , Kappa Phycus Sea Weed Cultivation etc… ) The Government introduced schemes such as above have really vandalized the coast and devastated the pristine marine wealth.
It is the Governments that have corrupted the minds of the people (fishers) in the past 5 decades and have forced /trained the fishers to loot the wealth by motivating them to be export / market oriented otherwise even the mechanized fishers would not have turned marine destroyers.
It is very unfair that the traditional fishers who have been very eco friendly and sustainable in their fishing till today have been blamed and accused by the GOMBRT. It is they who fish only for livelihood not for the profit or market. As they are eco friendly and sustainable in their fishing, they are still contributing to the country’s total ¼ (25%) of export profit from fisheries.
It is they who have been the natural guardians of the GOM treasure and unpaid warriors of our coastal borders. If any plan of conservation or Management should begin from them. They should be at the centre of any conservation program. Without them, it is impossible for the GOMBRT /Government could manage it or even protected the coastal territory of our nation.
The Statement, the plans and the intentions of the GOMBRT Director have clearly violates the Right to life and Right to Livelihood guaranteed in the Constitution of India. It categorically denies the customary and traditional rights of the fishers over the territorial waters.
If she continues with such anti people and anti marine/ environmental policies and plans, she is creating a law and order problem and disturbing the peaceful coexistence in the GOM region.
How come suddenly the tourists have become more eco friendly than the native traditional fishers who cater for the marine wealth and who eke out a sustainable living relying /depending on the marine wealth for centuries?
It is a undeniable history in the world that wherever the tourism is permitted in the protected areas or National parks or eco sensitive areas, it has really done a great havoc to the environments.
CPF condemns the arrogant and undemocratic attitude of the GOMBRT Director, which hither to have been unheard of in this region. The Previous GOMBRT officials have been so democratic and open minded to carry out the Management Plans of the GOM region.
If she continues to function in such a style of management, we need to really question the need of the National Marine Park of GOM itself?
CPF will never accept such moves of the GOMBRT Director to prevent the traditional fishers to fish in the GOM region. CPF will mobilize traditional fisher people against such livelihood threats from the GOMBRT.
Regards,
Pushparayan
Convener /Secretary
CPF PRESS MEET – RAMANATHAPURAM & THOOTHUKUDI 28.05.2010 - 11 AM.
Conservation or Commercialisation?
CPF is against GOMBRT Director Aruna Basu Sarkar’s recent move /announcement to ban fishing in GOM islands from June first week onwards and opening up entry for tourists to visit 21 coral islands.
CPF questions and doubts very seriously of the real motive of GOMBRT Director whether she wants to conserve the biodiversity and ecosystem of the GOM region or to destroy it permanently by permitting tourism or other developmental activities into the islands.
The fishers and the coastal communities down the centuries have been protecting biodiversity of the GOM region even before the nation or Government could realize the uniqueness of the region and enacting the subsequent laws to protect the same.
The Government recently is coming forward in this 21st century with management plans or projects which really have disturbed the web of life in the GOM ecosystem. (INDO NORWEGION Fishing Technology, Mechanisation of boats, Coral Mining ,Industrialisation , Sand mining , Sethu Samudram Ship Canal project , Kappa Phycus Sea Weed Cultivation etc… ) The Government introduced schemes such as above have really vandalized the coast and devastated the pristine marine wealth.
It is the Governments that have corrupted the minds of the people (fishers) in the past 5 decades and have forced /trained the fishers to loot the wealth by motivating them to be export / market oriented otherwise even the mechanized fishers would not have turned marine destroyers.
It is very unfair that the traditional fishers who have been very eco friendly and sustainable in their fishing till today have been blamed and accused by the GOMBRT. It is they who fish only for livelihood not for the profit or market. As they are eco friendly and sustainable in their fishing, they are still contributing to the country’s total ¼ (25%) of export profit from fisheries.
It is they who have been the natural guardians of the GOM treasure and unpaid warriors of our coastal borders. If any plan of conservation or Management should begin from them. They should be at the centre of any conservation program. Without them, it is impossible for the GOMBRT /Government could manage it or even protected the coastal territory of our nation.
The Statement, the plans and the intentions of the GOMBRT Director have clearly violates the Right to life and Right to Livelihood guaranteed in the Constitution of India. It categorically denies the customary and traditional rights of the fishers over the territorial waters.
If she continues with such anti people and anti marine/ environmental policies and plans, she is creating a law and order problem and disturbing the peaceful coexistence in the GOM region.
How come suddenly the tourists have become more eco friendly than the native traditional fishers who cater for the marine wealth and who eke out a sustainable living relying /depending on the marine wealth for centuries?
It is a undeniable history in the world that wherever the tourism is permitted in the protected areas or National parks or eco sensitive areas, it has really done a great havoc to the environments.
CPF condemns the arrogant and undemocratic attitude of the GOMBRT Director, which hither to have been unheard of in this region. The Previous GOMBRT officials have been so democratic and open minded to carry out the Management Plans of the GOM region.
If she continues to function in such a style of management, we need to really question the need of the National Marine Park of GOM itself?
CPF will never accept such moves of the GOMBRT Director to prevent the traditional fishers to fish in the GOM region. CPF will mobilize traditional fisher people against such livelihood threats from the GOMBRT.
Regards,
Pushparayan
Convener /Secretary
Sunday, June 13, 2010
Thursday, June 10, 2010
இலங்கை கடற்படையினர் அட்டகாசம்
தமிழக மீனவர்களை தாக்கி மீன்கள் பறிப்பு :
தமிழக மீனவர்களை நடுக்கடலில், இலங்கை கடற்படையினர் தாக்கி மீன்களை பறித்து சென்றுள்ளனர். ராமேஸ்வரத்திலிருந்து நேற்று முன்தினம், 694 படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். அன்று இரவு வழக்கம் போல், இலங்கை கடல் பகுதிக்குள் மீனவர்கள் செல்ல முயன்றபோது,ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், படகுகளை தடுத்து திருப்பி அனுப்பினர். கடற்படையினருக்கு போக்குகாட்டி, வேறு பகுதிக்கு சென்ற படகுகளில் உள்ள மீனவர்களை தாக்கி, இறால் மீன்களையும் பறித்துள்ளனர். நேற்று காலை, கரை திரும்பிய மீனவர்கள் சூசை, அல்போன்ஸ் கூறியதாவது: வழக்கத்தைவிட நேற்று காற்று குறைவாக இருந்ததால், இலங்கை கடற்படையினர் பலமுறை கடலில் ரோந்து வந்தனர். நடுக்கடலில் படகை வழிமறித்து மீனவர்களை தாக்கிய கடற்படையினர், 20 க்கும் மேற்பட்ட படகில் இறால் மீன்களையும் பறித்தனர் என்றனர். கடலுக்கு சென்று, மீன்பிடிக்க துவங்கி 10 நாட்கள்கூட முடியாத நிலையில், கடற்படையினர் மீனவர்களை தாக்க துவங்கி உள்ளனர். இலங்கை கடற்படையின் அத்துமீறலை தடுத்து நிறுத்த, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, மீனவர்கள் தெரிவித்தனர்.
தமிழக மீனவர்களை நடுக்கடலில், இலங்கை கடற்படையினர் தாக்கி மீன்களை பறித்து சென்றுள்ளனர். ராமேஸ்வரத்திலிருந்து நேற்று முன்தினம், 694 படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். அன்று இரவு வழக்கம் போல், இலங்கை கடல் பகுதிக்குள் மீனவர்கள் செல்ல முயன்றபோது,ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், படகுகளை தடுத்து திருப்பி அனுப்பினர். கடற்படையினருக்கு போக்குகாட்டி, வேறு பகுதிக்கு சென்ற படகுகளில் உள்ள மீனவர்களை தாக்கி, இறால் மீன்களையும் பறித்துள்ளனர். நேற்று காலை, கரை திரும்பிய மீனவர்கள் சூசை, அல்போன்ஸ் கூறியதாவது: வழக்கத்தைவிட நேற்று காற்று குறைவாக இருந்ததால், இலங்கை கடற்படையினர் பலமுறை கடலில் ரோந்து வந்தனர். நடுக்கடலில் படகை வழிமறித்து மீனவர்களை தாக்கிய கடற்படையினர், 20 க்கும் மேற்பட்ட படகில் இறால் மீன்களையும் பறித்தனர் என்றனர். கடலுக்கு சென்று, மீன்பிடிக்க துவங்கி 10 நாட்கள்கூட முடியாத நிலையில், கடற்படையினர் மீனவர்களை தாக்க துவங்கி உள்ளனர். இலங்கை கடற்படையின் அத்துமீறலை தடுத்து நிறுத்த, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, மீனவர்கள் தெரிவித்தனர்.Monday, June 7, 2010
மீனவர்கள் கருப்புக் கொடி எதிர்ப்பு

தூத்துக்குடி அருகே உள்ள மன்னார் வளைகுடா கடல் பகுதியில் உள்ள 21 தீவுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க தடை செய்துள்ளதாக வந்த அறிவிப்பினைத் தொடர்ந்து அதற்கு ராமேஸ்வரம் முதல் தூத்துக்குடி வரையிலான நாட்டுப்படகு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தூத்துக்குடி திரேஸ்புரம், மாதா நகர், முத்தரையர் காலனி பகுதியில் உள்ள மீனவர்கள் தங்கள் வீடுகளிலும் நாட்டுப்படகுகளிலும் கருப்புக் கொடி ஏற்றி அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
கட்சத் தீவுகளுக்கு உரிமை கோரும் இந்த நேரத்தில் சொந்த தீவுகளில் மீன் பிடிக்கும் உரிமையை விட்டுக் கொடுக்க மாட்டோம். அடுத்த மிகப் பெரிய போராட்டத்தை அரசு சந்திக்க வேண்டியதுவரும் என்று தூத்துக்குடி வடபகுதி மீனவர் சங்க தலைவர் ஜாண்சன் சங்குகுளி தொழிலாளர் சங்க தலைவர் இசக்கிமுத்து, செயலாளர் இஸ்மாயில், முத்தரையர் சமுதாயத் தலைவர் முனியசாமி ஆகியோர் தெரிவித்தனர்.
Friday, June 4, 2010
தீவுகளை பாதுகாக்க போயா மிதவைகள்
மன்னார் வளைகுடாவில் உள்ள 21 தீவுகளுக்கும் சுற்றுலா படகுகளை இயக்கும் திட்டம் எதுவும் இல்லை என மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரின முதன்மை வன பாதுகாவலர் அருணா பாசு சர்க்கார் கூறினார்.
தூத்துக்குடியில் மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரின முதன்மை வன பாதுகாவலர் அருணா பாசு சர்க்கார் அளித்த பேட்டி: மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பக அறக்கட்டளை பல திட்டங்களை மீனவ கிராம மேம்பாட்டிற்காக செயல்படுத்தி வருகிறது. இத்திட்டங்கள் முழுமையாக கிராமங்களை சென்றடையவில்லை. இருப்பினும் மீனவர்களின் பொருளாதாரத்தை உயர்த்த பல செயல் திட்டங்கள் வகுக்கப்பட்டு மீன் வள கல்லூரி மூலம் ஆராய்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தூத்துக்குடியில் மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரின முதன்மை வன பாதுகாவலர் அருணா பாசு சர்க்கார் அளித்த பேட்டி: மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பக அறக்கட்டளை பல திட்டங்களை மீனவ கிராம மேம்பாட்டிற்காக செயல்படுத்தி வருகிறது. இத்திட்டங்கள் முழுமையாக கிராமங்களை சென்றடையவில்லை. இருப்பினும் மீனவர்களின் பொருளாதாரத்தை உயர்த்த பல செயல் திட்டங்கள் வகுக்கப்பட்டு மீன் வள கல்லூரி மூலம் ஆராய்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.எந்த ஒரு சமுதாயமும் முன்னேற கல்வி மிக அவசியம். மீனவ மக்கள் கல்விக்காக மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பக அறக்கட்டளை மாணவ மாணவியருக்கு தொழில் கல்வியை அளித்து வருகிறது. குறிப்பாக மெரிட் இருக்கும் மாணவ மாணவியருக்கு கல்வி கட்டணத்தை அறக்கட்டளையே ஏற்றுக்கொள்கிறது. மன்னார் வளைகுடாவில் உள்ள 21 தீவுகளையும் சுற்றி போயா மிதவைகள் அமைக்கப்படுவது முழுக்க முழுக்க மத்திய அரசின் திட்டம். இது மீன் மற்றும் இயற்கை வளத்தை பாதுகாக்கத்தான். இது மீனவர்கள் நலனுக்கு எதிரானது அல்ல.
வரைமுறைகளை மீறி மீன் பிடித்து கொண்டிருக்கும் நமது செயல்பாடுகளினால் வரும் 2050 கடலில் மீன் பிடிக்க வாய்ப்பே இல்லாத நிலை உறுவாகிவிடும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக அறக்கட்டளை சார்பில் தலா மூன்று லட்சம் சார்பில் முழுக்க முழுக்க பைபரால் ஆன 5 படகுகள் வாங்கப்படுகின்றன. ஏற்கனவே பாம்பன் பகுதியில் இது போன்று இரு படகுகள் வாங்கப்படுகின்றன. லைப் ஜாக்கெட் உள்ளிட்ட வசதிகள் இதில் உள்ளன. இதில் சுற்றுலா பயணிகளை கடலில் குறிப்பிட்ட தூரம் வரை அழைத்து செல்லப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு கடலுக்கடியில் வாழும் உயிரினங்களை கண்டு ரசிக்கவும் அவை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இது உதவும். புதிதாக வாங்கப்படும் படகுகளை ஒப்பந்த அடிப்படையில் இயக்கும் பணி மீனவ சமுதாய மக்களுக்கே வழங்கப்படுகிறது.
வாய்ப்புகள் இருந்தால் தூத்துக்குடி கடல் பகுதியிலும் இது போன்று இரு படகுகள் சுற்றுலா பயணிகளை கடலுக்கு அழைத்து செல்ல பயண்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இவை முழுக்க முழுக்க கடல் வாழ் உயிரினங்கள் குறித்து தெரிந்து கொள்வதற்காகத்தான். இவற்றை பயண்படுத்தி தீவுகளுக்கு செல்ல அனுமதி கிடையாது. மேலும் தீவுகளை பாதுகாக்க போயா மிதவைகள் விரைவில் அமைக்கப்படும். 21 தீவுகளுக்கும் சுற்றுலா படகுகள் இயக்கும் திட்டம் எதுவும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
------------------------------------------------------------------------------------------------
ஜூன் 04,2010,00:52 IST
ஜூன் 04,2010,00:52 ISTதூத்துக்குடி: "மன்னார் வளைகுடா தீவுகளுக்கு, சுற்றுலா படகுகளை இயக்கும் திட்டம் இல்லை,'' என, மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பக அறக்கட்டளை இயக்குனர், அருணா பாசு சர்க்கார் தெரிவித்தார்.
தூத்துக்குடி மீன்வள கல்லூரியில் நேற்று, மீனவர்களுக்கான மீன்வள பாதுகாப்பு குறித்த, விழிப்புணர்வு முகாமில் கலந்து கொண்ட அவர், நிருபர்களிடம் கூறியதாவது: மன்னார் வளைகுடாவின், 21 தீவுகளிலுள்ள பவளப்பாறைகளை பாதுகாக்க, அதை சுற்றி, "போயா' என்ற கடல் மிதவை விரிக்க, மத்திய அரசு தான் முடிவெடுத்தது. மன்னார் வளைகுடா, அறக்கட்டளை முடிவெடுக்கவில்லை. மீனவர்கள் எதிர்ப்பு காரணமாக, அங்கு கடல் மிதவைகள் போடப்படவில்லை. பாக்., வளைகுடா பகுதியிலுள்ள பவளப்பாறைகள், நட்சத்திர மீன்கள் உள்ளிட்ட அரிய கடல்வாழ் உரியினங்களை, சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்க வசதியாக, அப்பகுதிக்கு, கண்ணாடி இழை படகுகள், இயக்க முடிவு செய்யப்பட்டது. தற்போது முதற்கட்டமாக, ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் பகுதியிலிருந்து, பாக்., வளைகுடா கடல் பகுதிக்கு, இருபடகுகள் இயக்கப்படுகின்றன. ஒரு படகில் எட்டு பேர் வரை, பயணம் செய்யலாம். கட்டணமாக, தலா 50 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. கடலில் மொத்தம் 25 நிமிடம், அரிய கடல்வாழ் உயிரினங்கள் காண்பிக்கப்படும். இப்படகில் இரு ஓட்டுனர்கள் இருப்பர். மீனவர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள், "கான்ட்ராக்ட்' அடிப்படையில், இந்த படகை இயக்கி வருகின்றனர். சுற்றுலாவிற்காக, மேலும் ஐந்து படகுகள் வாங்கப்படவுள்ளன. ஒரு படகின் விலை, அதிகபட்சம் 3 லட்சம் ரூபாய். அதில், லைப் ஜாக்கெட் (உயிர்காக்கும் சட்டை) உள்ளிட்டவை இருக்கும். இதற்கு, பாம்பனில் நல்ல வரவேற்புள்ளதால், தூத்துக்குடி கடலிலும், இதுபோன்ற சுற்றுலா படகுகளை விடுவது குறித்த திட்டம், பரிசீலனையில் உள்ளது. இச்சுற்றுலா படகுகளை, மன்னார் வளைகுடா தீவுகளுக்கு, இயக்கும் திட்டம் இல்லை. எனவே, தங்களது மீன்பிடித் தொழில் பாதிக்கப்படுமோ என்ற அச்சம், மீனவர்களுக்கு தேவையில்லை. மன்னார் வளைகுடாவில் பவளப்பாறை வளர்ச்சி குறித்து, ஆய்வு செய்து முடிவெடுக்கப்படும். இவ்வாறு அருணா பாசு சர்க்கார் கூறினார்.மன்னார் வளைகுடா தீவுகளை, அரசு சுற்றுலாத்தலமாக அறிவித்து, அங்கு சுற்றுலா படகுகளை இயக்கி, மீன்பிடி தொழிலுக்கு, அப்பகுதியில் தடைவிதிக்கவுள்ளதாக, தகவல்கள் வெளியாயின. அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்ட நாட்டுப் படகு மீனவர்கள், நாளை, படகு மற்றும் கிராமங்களில், கறுப்புக்கொடி ஏற்றி, போராட்டம் நடத்தப் போவதாக, அறிவித்துள்ள சூழ்நிலையில், அறக்கட்டளை இயக்குனர் இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.தீவுகளை சுற்றுலாத்தலமாக்குவதற்கு எதிர்ப்பு
தூத்துக்குடி : மன்னார்வளைகுடா பகுதியில் உள்ள 21 தீவுகளை சுற்றுலாத்தலமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடலோர மீனவர் மக்கள் கூட்டமைப்பு சார்பில் வரும் 5ம் தேதி மீனவ கிராமங்களில் கருப்புகொடி ஏற்றி தங்கள் எதிர்ப்பினை தெரிவிக்க உள்ளனர்.
இது குறித்து தூத்துக்குடி மாவட்ட வடபகுதி மீனவர் சங்க செயலாளர் ஜான்சன் நிருபர்களிடம் கூறியதாவது;மன்னார்வளைகுடா பகுதியில் உள்ள 21 தீவுகளை சுற்றுலா தலமாக்கும் முயற்சியில் அரசு தற்போது ஈடுபட்டு வருகிறது. இதற்காக அந்த பகுதியில் நாட்டுபடகுகள் மூலம் மீன்பிடிப்பதை தடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை கண்டித்து ராமநாதபுரம் மாவட்ட கடலோர மக்கள் கூட்டமைப்பு சார்பில் வரும் 5ம் தேதி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்ட அமைப்பு சார்பில் 5ம் தேதி நாட்டுபடகுகள் மற்றும் மீனவ கிராமங்களில் கருப்பு கொடி ஏற்றி எங்கள் எதிர்ப்பினை தெரிவிக்க உள்ளோம். வேம்பார் முதல் தூத்துக்குடி வரையிலும் உள்ள சுமார் 1.5 லட்சம் மீனவர்களும், ஆயிரம் நாட்டுபடகுகளும் இந்த எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர். மீனவர்களின் நலனை பாதுகாக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட மன்னார்வளைகுடா உயிர்கோள காப்பக அறக்கட்டளை, தற்போது மீனவர்கள் நலனுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. 21 தீவுகளை சுற்றிலும் உள்ள பவள பாறைகள் அழிவிற்கு மீனவர்கள் தான் காரணம் என்று குற்றம் சுமத்தப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பே தூத்துக்குடியில் உள்ள அரசு அலுவலக கட்டடங்கள் உட்பட பல பெரிய கட்டடங்கள் பவளப் பாறைகளை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. கடத்தலில் ஈடுபடுபவர்களை எல்லாம் விட்டு விட்டு கடலில் மீன்பிடிக்க செல்லும் அப்பாவி மீனவர்களை கைது செய்து வருகின்றனர். மன்னார்வளைகுடா உயிர்கோள காப்பக அறக்கட்டளையின் செயல்பாடுகள் சரியில்லாத காரணத்தால் யுனஸ்கோ ரூ.100 கோடி நிதியை நிறுத்தி வைத்துள்ளது. தற்போது கடற்கரை பகுதியில் இருந்து சுமார் 10 கிமீ., வரையிலும் கடல் பகுதியில் சாம்பல் துகள்கள் மிதந்து வருகிறது. இதற்கு மிகப்பெரிய கம்பெனிகள் தான் காரணம். 21 தீவுகளையும் சுற்றுலா தலமாக்கினால் கடல் வளமும், மீன் வளமும் பாதிக்கபடுவதோடு, மீன்பிடித் தொழிலை மட்டுமே நம்பியுள்ள மீனவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என்று கூறினார். அப்போது வடபகுதி பொருளாளர் இஸ்மாயில், தூத்துக்குடி மாவட்ட கரைமடி மீனவர் சங்கத் சேர்ந்த கணேசன், மீன் சார்பு தொழிலாளர் சங்க தலைவர் ஜார்ஜ் கோமஸ் உட்பட பலர் உடன் இருந்தனர்.
சுற்றுலா தலமாகிறது தீவுகள்: மீனவர்கள் எதிர்ப்பு
தூத்துக்குடி: மன்னார் வளைகுடாவில் உள்ள 21 தீவு பகுதிகளையும் சுற்றுலாதலமாக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும், இதனை கண்டித்து வரும் 5ம் தேதி முதல் நாட்டுபடகு மீனவர்கள் கடலுக்கு போகாமல் தொழில் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவும் முடிவு செய்துள்ளனர்.
560 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 21 தீவுகள்; மன்னார் வளைகுடாவில் தற்போது சுமார் 560 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் வான்தீவு, கோசுவாடி தீவு, விலாங்குசல்லி தீவு, காரைசல்லி தீவு, உப்பு தண்ணீர் தீவு, புளுனிசல்லிதீவு, நல்லதண்ணீர் தீவு, அணைப்பார் தீவு, வாலிமுனை தீவு, அப்பாதீவு, பூவரசன்பட்டி தீவு, தலையாரி தீவு, வாழைத் தீவு, முல்லைத் தீவு, முயல்தீவு, மனோலிதீவு, மனோலிபுட்டி தீவு, பூமரிச்சான் தீவு, குருசடை தீவு, சிங்கிலி தீவு என மொத்தம் 21 தீவுகள் உள்ளது. இந்த தீவுகளில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் காட்டு இன குதிரை, முயல், நாய் போன்ற விலங்குகள் வசித்து வந்தன. இது தவிர இந்த தீவுகளில் அரியவகை மூலிகைகளும், தாவர வகைகளும் முன்பு இருந்ததாக தெரியவருகிறது. மன்னார்வளைகுடா பகுதியில் நாட்டு படகுகளில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் தங்களது ஓய்வு இடமாக இந்த தீவுகளை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த 1986ம் ஆண்டில் 21 தீவுகளையும் தேசிய கடல்வளப் பூங்கா என அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பின் மூலம் மீனவர்களுக்கு சில கட்டுபாடுகளையும் விதித்தது. ஆரம்பத்தில் சில மீனவ சங்கங்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தன.
சுனாமியை தடுத்த தீவுகள்; இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட சுனாமியின் போது தான் இந்த தீவுகளின் மகிமை வெளி உலகிற்கு தெரியவந்தது. பல கடற்பகுதியில் சுனாமியின் கொடூரம் அதிகமாக இந்தாலும், மன்னார்வளைகுடா பகுதியில் அதன் தாக்கம் வெகு குறைவாகவே இருந்தது. அதற்கு காரணம் மன்னார் வளைகுடாவில் உள்ள 21 தீவுகளையும் சுற்றி இயற்கையாகவே அமைந்துள்ள பவளப்பறைகள் தான். இந்த பவளப்பறைகளுக்கு சுனாமியின் தாக்கத்தை தடுக்கும் சக்தி உண்டு என்பதை அப்போது அனைவரும் அறிந்து வியந்தனர். இதன் பின்னர் இந்த தீவுகளின் மீது அரசின் பார்வை அதிகரித்தது. மன்னார்வளைகுடா உயிர்கோள காப்பக அறக்கட்டளையினர் இந்த தீவுகளின் மீது அதிக கவனம் செலுத்த தொடங்கினர். இந்த தீவுகளை சுற்றிலும் செயற்கையான பவளப்பாறைகளை உருவாக்கினர்.
சுற்றுலா தலமாகிறது தீவுகள்: தீவுகளில் அதிக அளவில் செடிகளை நட்டு பராமரிக்க தொடங்கினர். தீவு பகுதியையும், அதனை ஒட்டியுள்ள பவளப்பாறைகளையும் பாதுகாக்கும் நோக்கத்துடன் கோயா மிதவைகளை மிதக்கவிட்டனர். இந்த மிதவைகளுக்கு உட்பகுதியில் மீனவர்களும், படகுகளும் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இந்த பிரச்னை தற்போது வரையிலும் நீடித்து வருகிறது. இந்நிலையில் தற்போது இந்த தீவு பகுதிகளை சுற்றுலா தலமாக்க முயற்சிகள் நடந்து வருவதாக தெரிகிறது. 21 தீவுகளையும் தூத்துக்குடி, வேம்பார், கீழக்கரை, ராமநாதபுரம் ஆகிய நான்கு மண்டலங்களாக பிரிந்து, இதன் மூலம் சுற்றுலா படகு போக்குவரத்தை தொடங்க மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பக அறக்கட்டளை முடிவு செய்துள்ளது.
மீனவர்கள் எதிர்ப்பு : 21 தீவுகளுக்கும் சுற்றுலா பயணிகள் சென்று வர செயற்கைஇழை படகுகள் தயாரிக்கப்பட்டு அதன் மூலம் சுற்றி பார்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக 21 தீவு பகுதிகளை ஒட்டியும் மீனவர்கள் மீன்பிடிக்க தடை விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கு கடலோர மக்கள் கூட்டமைப்பினர் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். இது குறித்து இந்த அமைப்பின் அமைப்பாளர் புஷ்பராயன் கூறும்போது, இந்த பகுதியில் இன்றளவிலும் சுமார் 2 லட்சம் மீனவ மக்கள் மீன்பிடித்தொழில் மூலம் வாழ்க்கை நடத்தி வருகின்றனர். காலம், காலமாக கடல்வளத்தையும், உயிர்சூழலினையும் பாதுகாத்து, பாரம்பரிய மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த 21 தீவுகளுக்கும் பொதுமக்கள் படகுகளில் சென்று வர ஜூன் மாதம் முதல் அனுமதிவழங்கப்படும் என்றும் , அப்பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்க கூடாது என மீன்வளத்துறை மூலம் அறிவுறுத்தப்படுவார்கள் என்ற அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. அரசின் இந்த அறிவிப்பு மீனவ மக்களை அந்நியப்படுத்தும், வாழ்வாதாரத்தை பாதிக்கும் செயலாகும். மண்ணின் மைந்தர்களை, பாரம்பரிய மீனவர்களை கடல்தொழிலில் இருந்து அந்நியப்படுத்திவிட்டு, மீன்பிடித் தொழிலை தடை செய்துவிட்டு சுற்றுலா பயணிகளையும், வெளிநாட்டினரையும் தீவுப்பகுதியில் அனுமதிக்கும் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. கடல்வளப்பாதுகாப்பிற்காக செயல்படுகின்றோம் என்ற போர்வையில் கடல்வளத்திற்கும், மீனவர் நலனுக்கும் எதிராக செயல்படும் மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பக அறக்கட்டளையினையும், அதன் இயக்குனரின் செயல்பாட்டினையும் கடலோர மக்கள் கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது. சுற்றுலாவினையும், வளர்ச்சிதிட்டங்கள் என்ற பெயரில் சுற்றுசூழல் சீர்கேட்டினை ஏற்படுத்தும் தொழிற்சாலைகள், இறால் பண்ணைகள், உப்பளங்கள் போன்றவற்றை அனுமதித்துவிட்டு, மீன்பிடித்தலுக்கு தடைபோடும் உள்நோக்கம் என்ன என்ற கேள்வி எழும்புகிறது. நமது நாட்டில் எங்கெல்லாம் சுற்றுலாவாக அறிவிக்கப்பட்டதோ அங்கெல்லாம் இய ற்கை வளங்கள் பாழ்பட்டுபோய்தான் உள்ளது. இயற்கையை அழி க்கும் இச்செயலினை உடனே கைவிடவேண்டும். இந்தியாவின் ஏற்றுமதியில் 25 சதவீத அந்நிய செலவாணி ஈட்டி வருவது மீன்பிடித் தொழில் தான். மீனவ மக்களுக்கு எதிரான, தேசபாதுகாப்பை கேள்விகுறியாக்கும் அரசின் இந்த அறிவிப்பை கைவிட்டு மீனவ மக்களின் பாரம்பரிய உரிமைகளினை காக்க வலியுறுத்தி உலக சுற்றுசூழல் தினமான ஜூன் 5ம் தேதி தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்ட நாட்டுபடகு மீனவர்கள் கடலுக்கு போகாமல் தொழில் புறக்கணிப்பு போராட்டம் செய்ய உள்ளோம் என்று கூறினார்.
560 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 21 தீவுகள்; மன்னார் வளைகுடாவில் தற்போது சுமார் 560 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் வான்தீவு, கோசுவாடி தீவு, விலாங்குசல்லி தீவு, காரைசல்லி தீவு, உப்பு தண்ணீர் தீவு, புளுனிசல்லிதீவு, நல்லதண்ணீர் தீவு, அணைப்பார் தீவு, வாலிமுனை தீவு, அப்பாதீவு, பூவரசன்பட்டி தீவு, தலையாரி தீவு, வாழைத் தீவு, முல்லைத் தீவு, முயல்தீவு, மனோலிதீவு, மனோலிபுட்டி தீவு, பூமரிச்சான் தீவு, குருசடை தீவு, சிங்கிலி தீவு என மொத்தம் 21 தீவுகள் உள்ளது. இந்த தீவுகளில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் காட்டு இன குதிரை, முயல், நாய் போன்ற விலங்குகள் வசித்து வந்தன. இது தவிர இந்த தீவுகளில் அரியவகை மூலிகைகளும், தாவர வகைகளும் முன்பு இருந்ததாக தெரியவருகிறது. மன்னார்வளைகுடா பகுதியில் நாட்டு படகுகளில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் தங்களது ஓய்வு இடமாக இந்த தீவுகளை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த 1986ம் ஆண்டில் 21 தீவுகளையும் தேசிய கடல்வளப் பூங்கா என அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பின் மூலம் மீனவர்களுக்கு சில கட்டுபாடுகளையும் விதித்தது. ஆரம்பத்தில் சில மீனவ சங்கங்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தன.
சுனாமியை தடுத்த தீவுகள்; இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட சுனாமியின் போது தான் இந்த தீவுகளின் மகிமை வெளி உலகிற்கு தெரியவந்தது. பல கடற்பகுதியில் சுனாமியின் கொடூரம் அதிகமாக இந்தாலும், மன்னார்வளைகுடா பகுதியில் அதன் தாக்கம் வெகு குறைவாகவே இருந்தது. அதற்கு காரணம் மன்னார் வளைகுடாவில் உள்ள 21 தீவுகளையும் சுற்றி இயற்கையாகவே அமைந்துள்ள பவளப்பறைகள் தான். இந்த பவளப்பறைகளுக்கு சுனாமியின் தாக்கத்தை தடுக்கும் சக்தி உண்டு என்பதை அப்போது அனைவரும் அறிந்து வியந்தனர். இதன் பின்னர் இந்த தீவுகளின் மீது அரசின் பார்வை அதிகரித்தது. மன்னார்வளைகுடா உயிர்கோள காப்பக அறக்கட்டளையினர் இந்த தீவுகளின் மீது அதிக கவனம் செலுத்த தொடங்கினர். இந்த தீவுகளை சுற்றிலும் செயற்கையான பவளப்பாறைகளை உருவாக்கினர்.
சுற்றுலா தலமாகிறது தீவுகள்: தீவுகளில் அதிக அளவில் செடிகளை நட்டு பராமரிக்க தொடங்கினர். தீவு பகுதியையும், அதனை ஒட்டியுள்ள பவளப்பாறைகளையும் பாதுகாக்கும் நோக்கத்துடன் கோயா மிதவைகளை மிதக்கவிட்டனர். இந்த மிதவைகளுக்கு உட்பகுதியில் மீனவர்களும், படகுகளும் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இந்த பிரச்னை தற்போது வரையிலும் நீடித்து வருகிறது. இந்நிலையில் தற்போது இந்த தீவு பகுதிகளை சுற்றுலா தலமாக்க முயற்சிகள் நடந்து வருவதாக தெரிகிறது. 21 தீவுகளையும் தூத்துக்குடி, வேம்பார், கீழக்கரை, ராமநாதபுரம் ஆகிய நான்கு மண்டலங்களாக பிரிந்து, இதன் மூலம் சுற்றுலா படகு போக்குவரத்தை தொடங்க மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பக அறக்கட்டளை முடிவு செய்துள்ளது.
மீனவர்கள் எதிர்ப்பு : 21 தீவுகளுக்கும் சுற்றுலா பயணிகள் சென்று வர செயற்கைஇழை படகுகள் தயாரிக்கப்பட்டு அதன் மூலம் சுற்றி பார்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக 21 தீவு பகுதிகளை ஒட்டியும் மீனவர்கள் மீன்பிடிக்க தடை விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கு கடலோர மக்கள் கூட்டமைப்பினர் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். இது குறித்து இந்த அமைப்பின் அமைப்பாளர் புஷ்பராயன் கூறும்போது, இந்த பகுதியில் இன்றளவிலும் சுமார் 2 லட்சம் மீனவ மக்கள் மீன்பிடித்தொழில் மூலம் வாழ்க்கை நடத்தி வருகின்றனர். காலம், காலமாக கடல்வளத்தையும், உயிர்சூழலினையும் பாதுகாத்து, பாரம்பரிய மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த 21 தீவுகளுக்கும் பொதுமக்கள் படகுகளில் சென்று வர ஜூன் மாதம் முதல் அனுமதிவழங்கப்படும் என்றும் , அப்பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்க கூடாது என மீன்வளத்துறை மூலம் அறிவுறுத்தப்படுவார்கள் என்ற அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. அரசின் இந்த அறிவிப்பு மீனவ மக்களை அந்நியப்படுத்தும், வாழ்வாதாரத்தை பாதிக்கும் செயலாகும். மண்ணின் மைந்தர்களை, பாரம்பரிய மீனவர்களை கடல்தொழிலில் இருந்து அந்நியப்படுத்திவிட்டு, மீன்பிடித் தொழிலை தடை செய்துவிட்டு சுற்றுலா பயணிகளையும், வெளிநாட்டினரையும் தீவுப்பகுதியில் அனுமதிக்கும் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. கடல்வளப்பாதுகாப்பிற்காக செயல்படுகின்றோம் என்ற போர்வையில் கடல்வளத்திற்கும், மீனவர் நலனுக்கும் எதிராக செயல்படும் மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பக அறக்கட்டளையினையும், அதன் இயக்குனரின் செயல்பாட்டினையும் கடலோர மக்கள் கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது. சுற்றுலாவினையும், வளர்ச்சிதிட்டங்கள் என்ற பெயரில் சுற்றுசூழல் சீர்கேட்டினை ஏற்படுத்தும் தொழிற்சாலைகள், இறால் பண்ணைகள், உப்பளங்கள் போன்றவற்றை அனுமதித்துவிட்டு, மீன்பிடித்தலுக்கு தடைபோடும் உள்நோக்கம் என்ன என்ற கேள்வி எழும்புகிறது. நமது நாட்டில் எங்கெல்லாம் சுற்றுலாவாக அறிவிக்கப்பட்டதோ அங்கெல்லாம் இய ற்கை வளங்கள் பாழ்பட்டுபோய்தான் உள்ளது. இயற்கையை அழி க்கும் இச்செயலினை உடனே கைவிடவேண்டும். இந்தியாவின் ஏற்றுமதியில் 25 சதவீத அந்நிய செலவாணி ஈட்டி வருவது மீன்பிடித் தொழில் தான். மீனவ மக்களுக்கு எதிரான, தேசபாதுகாப்பை கேள்விகுறியாக்கும் அரசின் இந்த அறிவிப்பை கைவிட்டு மீனவ மக்களின் பாரம்பரிய உரிமைகளினை காக்க வலியுறுத்தி உலக சுற்றுசூழல் தினமான ஜூன் 5ம் தேதி தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்ட நாட்டுபடகு மீனவர்கள் கடலுக்கு போகாமல் தொழில் புறக்கணிப்பு போராட்டம் செய்ய உள்ளோம் என்று கூறினார்.
By ரெ. ஜாய்சன் , 29 May 2010 01:03:50 PM IST
தூத்துக்குடி, மே 28: மன்னார் வளைகுடாவில் உள்ள 21 தீவு பகுதிகளில் ஜூன் முதல் மீன்பிடிக்க தடை விதிக்கப்படும் என்ற செய்தி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மத்தியில்அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஜூன் 5-ம் தேதி முதல் தொடர் போராட்டங்களை நடத்த மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.மன்னார் வளைகுடா உலக முக்கியத்துவம்வாய்ந்த கடல்சார் உயிர்ப்பல்வகைமைகளுக்கு புகலிடமாக உள்ளது.
உலகளவில் வளமான பகுதியாகக் கருதப்படும் இங்கு, ஏராளமான அரியவகை கடல்வாழ் உயிரினங்கள் உள்ளன. இதனைக் கருத்தில் கொண்டு இந்தப் பகுதியை மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரின தேசிய பூங்காவாக மத்திய அரசு 1980-ம் ஆண்டு அறிவித்தது.
தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதியில் 560 சதுர கி.மீ. பரப்பளவில் இந்தப் பூங்கா அமைந்துள்ளது. தூத்துக்குடி குழுவில் 4, வேம்பார் குழுவில் 3, கீழக்கரை குழுவில் 7, மண்டபம் குழுவில் 7என மொத்தம் 21 தீவுகள் இந்தப் பூங்கா பகுதியில் உள்ளன.
பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதால் இத் தீவுப் பகுதிகளுக்கு மீனவர்களோ, பொதுமக்களோ செல்ல அனுமதி கிடையாது.
இந்த தீவுகளை ஒட்டி பவளப்பாறைகள், கடல் புற்கள் போன்றவை அதிகளவில் காணப்படுகின்றன. இவை மீன்களின் முக்கிய உறைவிடமாக விளங்குவதால், இத் தீவுகளை ஒட்டி மீன்கள் அதிகம் காணப்படும்.
இதனால், தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் இந்த பகுதியில் 5 தலைமுறைகளாக மீன் பிடித்து வருகின்றனர்.
இதுநாள் வரை மீனவர்களுக்கு பெரிய அளவில் அதிகாரிகள் கட்டுப்பாடு எதையும் விதிக்கவில்லை. எனவே, மீனவர்கள் இந்த தீவு பகுதிகளில் சுதந்திரமாக மீன்பிடித்து வந்தனர்.
இந்த நிலையில் 26-ம் தேதி ராமநாதபுரத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற கடலோரப் பாதுகாப்பு குறித்த கலந்தாய்வுக் கூட்டத்தில், மன்னார் வளைகுடா பகுதியில் உள்ள 21 தீவுகளுக்கும் பொதுமக்கள் படகில் சென்று வர
ஜூன்முதல் வாரத்தில் இருந்து அனுமதி அளிக்கப்படும் என்றும், தீவு பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லக்கூடாது என மீன்வளத்துறை மூலம் அறிவுறுத்தப்படுவார்கள் என்றும், தீவு பகுதிகள் முழுவதும் மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக அறக்கட்டளையின் முழுக் கட்டுப்பாட்டில்கொண்டு வரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது.
இது தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மண்ணின் மைந்தர்களையும், பாரம்பரிய மீனவர்களையும் மீன்பிடித் தொழிலில் இருந்து அந்நியப்படுத்திவிட்டு, சுற்றுலாப் பயணிகளையும், வெளிநாட்டினரையும் தீவுப் பகுதிகளில் அனுமதிக்கும் இச்செயல் மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் கடுமையாகப் பாதிக்கும் என்றார் கடலோர மக்கள் கூட்டமைப்பு அமைப்பாளர் புஷ்பராயன்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
சுற்றுலாவையும், வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் சுற்றுச்சூழல் சீர்கேட்டினை ஏற்படுத்தும் தொழிற்சாலைகள், இறால் பண்ணைகள், உப்பளங்கள் போன்றவற்றை அனுமதித்துவிட்டு, மீன் பிடித்தலுக்குத் தடை போடும் உள்நோக்கம் என்ன என்பது குறித்து சந்தேகம் எழுகிறது.
அரசும், அறிவியலாளர்களும், சுற்றுச்சூழல் நிபுணர்களும் மன்னார் வளைகுடா கடல் பகுதி பாதுகாக்கப்பட்ட பகுதி, அரிய உயிரினங்கள் வாழும் பகுதி என கண்டறியும் முன்னரே, அறிவிக்கும் முன்னரே பாரம்பரிய மீனவர்கள் நூற்றாண்டு காலமாக தீவுகளையும், கடல் வளத்தையும் பாதுகாத்து வந்தனர் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
தற்போது 21-ம் நூற்றாண்டில் அறிமுகம் செய்யப்பட்ட கடல்வள மேலாண்மை திட்டங்கள், இந்திய- நார்வே மீன்பிடி திட்டங்கள், நவீன மீன்பிடி முறைகள், இயந்திரமயமாக்குதல், பவளப்பாறை அழிப்பு, கடலோர மணல் கொள்ளை, சேது சமுத்திர திட்டம், பாசி வளர்ப்பு போன்ற கடல் வளத்தை அழிக்கும், உயிர்ச் சூழலை கொடுக்கும், சுற்றுச்சூழல் பாதிப்பு திட்டங்களை அனுமதித்து மன்னார் வளைகுடா கடல் வளத்தை அழித்து கொண்டிருக்கும் மத்திய, மாநில அரசுகள் மீன்பிடி தொழிலுக்கு தடை விதிப்பது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது.
எனவே, மீனவ மக்களுக்கு எதிரான, தேச பாதுகாப்பை கேள்வி குறியாக்கும்.
இயற்கையை அழிக்கும் இச்செயலை உடனடியாக கைவிட வேண்டும். இதனை வலியுறுத்தி உலக சுற்றுச்சூழல் தினமானஜூன் 5-ம் தேதி தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்ட நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் தொழில் புறக்கணிப்பு போராட்டம் செய்கின்றனர்.
மேலும், ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை கிராமங்களில் உண்ணாவிரத போராட்டங்களும் அன்றைய தினம் தொடங்கப்படும் என்றார் அவர்.
இது தொடர்பாக மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பக அறக்கட்டளை இயக்குநரும், தலைமை வனப் பாதுகாவலருமான அருணாபாசு சர்க்காரிடம் கேட்ட போது, மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரின தேசிய பூங்காவில் உள்ள தீவுகள் பாதுகாக்கப்பட்ட பகுதியாகும்.
இந்த பகுதியில் சுற்றுலாப் பயணிகளை அனுமதிப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என திட்டவட்டமாக தெரிவித்தார்.
தீவுப் பகுதிகளில் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுவது குறித்து கேட்டபோது, இந்த பகுதி தடை செய்யப்பட்ட பகுதி என்பதால் மீனவர்கள், பொதுமக்கள் செல்ல ஏற்கெனவே தடை உள்ளது. அந்த தடை தொடர்ந்து நீடிக்கும் என்றார் அவர்.
நாட்டு படகு மீனவர்கள் எதிர்ப்பு
ராமநாதபுரம் : மன்னார் வளைகுடாவில் சுற்றுலா பயணிகளை அனுமதிக்கும் தேசிய பூங்கா திட்டத்துக்கு ,இரு மாவட்டங்களை சேர்ந்த நாட்டு படகு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வரும் ஜூன் 5ம் தேதி முதல் உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ளனர். அரிய வகை கடல்வாழ் உயிரினங்களை மன்னார் வளைகுடா பெற்றுள்ளதால்,இதற்கு கடந்த 1986ல் "தேசிய பூங்கா' அந்தஸ்து தரப்பட்டது.
இலங்கையில் உள்நாட்டு போர், கடத்தல்காரர்கள் அட்டகாசம் காரணமாக பூங்கா பயன்பாடின்றி இருந்து வந்தது. இலங்கை போர் நிறைவு பெற்று, கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மீண்டும் மன்னார் வளைகுடாவில் தேசிய பூங்காவை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக வேம்பார், கீழக்கரை, மண்டபம், தூத்துக்குடி என நான்கு பிரிவுகளாக பிரித்துள்ளனர். சுற்றுலாப்பயணிகள் இங்கிருந்து 21 தீவுகளுக்கும் சென்று வர அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இத்தீவுகளில் மீன்பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஜூன் முதல் வாரத்திலிருந்து அமலுக்கு வரவிருக்கும் இத்திட்டத்துக்கு, நாட்டுப்படகு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ராமநாதபுரத்தில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில், ராமநாதபுரம் மாவட்ட மீன்பிடி தொழிலாளர் யூனியன், தூத்துக்குடி கடலோர மக்கள் கூட்டமைப்பினர் பங்கேற்றனர்.
பின்னர் கடலோர மக்கள் கூட்டமைப்பின் செயலாளர் புஷ்பராயன் கூறியதாவது: தீவுகளில் சுற்றுலா பயணிகளை அனுமதிப்பது பாதிப்பையே ஏற்படுத்தும். பாலிதீன் உள்ளிட்ட அதிகமான கழிவுகள் சேர்ந்து தீவை நாசம் செய்து விடும். மனிதன் தோன்றியதற்கு ஆதாரங்கள் கொண்ட தீவுகள் நிறைய இருப்பதால், இந்த முடிவை அரசு கைவிடவேண்டும். வணிக நோக்கில் இதை செய்வது கண்டிக்கத்தக்கதாகும், என்றார்.
மீன்பிடி தொழிலாளர் யூனியன் தலைவர் பால்சாமி கூறியதாவது: அன்னியசெலாவணியைஅதிகம் ஈட்டித்தரும் மீனவர்களுக்கு அனுமதி மறுத்துவிட்டு, சுற்றுலா பயணிகளுக்கு மட்டும் அனுமதிப்பது நியாயமற்றது. இதை கண்டித்து உலக சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5 முதல் தூத்துக்குடி-ராமநாதபுரத்தின் கடலோர கிராமங்களின் மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளோம், என்றார்.
இலங்கையில் உள்நாட்டு போர், கடத்தல்காரர்கள் அட்டகாசம் காரணமாக பூங்கா பயன்பாடின்றி இருந்து வந்தது. இலங்கை போர் நிறைவு பெற்று, கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மீண்டும் மன்னார் வளைகுடாவில் தேசிய பூங்காவை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக வேம்பார், கீழக்கரை, மண்டபம், தூத்துக்குடி என நான்கு பிரிவுகளாக பிரித்துள்ளனர். சுற்றுலாப்பயணிகள் இங்கிருந்து 21 தீவுகளுக்கும் சென்று வர அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இத்தீவுகளில் மீன்பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஜூன் முதல் வாரத்திலிருந்து அமலுக்கு வரவிருக்கும் இத்திட்டத்துக்கு, நாட்டுப்படகு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ராமநாதபுரத்தில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில், ராமநாதபுரம் மாவட்ட மீன்பிடி தொழிலாளர் யூனியன், தூத்துக்குடி கடலோர மக்கள் கூட்டமைப்பினர் பங்கேற்றனர்.
பின்னர் கடலோர மக்கள் கூட்டமைப்பின் செயலாளர் புஷ்பராயன் கூறியதாவது: தீவுகளில் சுற்றுலா பயணிகளை அனுமதிப்பது பாதிப்பையே ஏற்படுத்தும். பாலிதீன் உள்ளிட்ட அதிகமான கழிவுகள் சேர்ந்து தீவை நாசம் செய்து விடும். மனிதன் தோன்றியதற்கு ஆதாரங்கள் கொண்ட தீவுகள் நிறைய இருப்பதால், இந்த முடிவை அரசு கைவிடவேண்டும். வணிக நோக்கில் இதை செய்வது கண்டிக்கத்தக்கதாகும், என்றார்.
மீன்பிடி தொழிலாளர் யூனியன் தலைவர் பால்சாமி கூறியதாவது: அன்னியசெலாவணியைஅதிகம் ஈட்டித்தரும் மீனவர்களுக்கு அனுமதி மறுத்துவிட்டு, சுற்றுலா பயணிகளுக்கு மட்டும் அனுமதிப்பது நியாயமற்றது. இதை கண்டித்து உலக சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5 முதல் தூத்துக்குடி-ராமநாதபுரத்தின் கடலோர கிராமங்களின் மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளோம், என்றார்.
அரிய கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாக்க தேசியப் பூங்கா ஜூன் முதல் வாரத்தில் அமைக்கப்படும்- ஆட்சியர்
ராமநாதபுரம், மே 27: அரியவகை கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாப்பதற்கான தேசியப் பூங்கா வரும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் அமைக்கப்படும் என, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் தெரிவித்தார்.ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பவளப்பாறைகள் பாதுகாப்பு மற்றும் கடலோரப் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதற்கு தலைமை வகித்து ஆட்சியர் த.ந.ஹரிஹரன் பேசியதாவது:
தீவிரவாதம், கடத்தல், ஊடுருவல் போன்றவற்றிலிருந்து கடலோரப் பகுதிகளை பாதுகாக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. கடலோரப் பாதுகாப்பு குறித்து மாதந்தோறும் கடலோர கிராமங்களில் உள்ள மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோட்டாட்சியர் தலைமையில் கிராமக் கூட்டம் நடத்தப்படவேண்டும்.
அக் கூட்டத்தில் சம்பந்தப்பட்ட அனைத்துத் துறையினரும் பாதுகாப்பு குறித்து எடுத்துரைக்க வேண்டும்.
வனத்துறை மற்றும் மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகம் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 21 தீவுகள், வேம்பார்,கீழக்கரை, மண்டபம், தூத்துக்குடி என நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு அவற்றில் கடல்வாழ் உயிரினங்கள் அதிகமாக வாழும் பகுதி தேசியப் பூங்காவாக ஜூன் முதல் வாரத்தில் அமைக்கப்படும். இந்தத் தீவுகளுக்கு படகுகள் மூலம் வரலாம்.
ஆனால் கண்டிப்பாக அந்தப் பகுதிகளில் மீன்பிடித்தல் கூடாது என்பதை மீனவர்களுக்கு மீன்வளத்துறையினர் தெரிவிக்கவேண்டும்.
மீன்பிடி படகுகளுக்கு உரிய அங்கீகாரம் இருக்கிறதா என்பதை அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து தங்கள் துறைகளைச் சேர்ந்த படகுகளைப் பயன்படுத்தி மாவட்டத்தில் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.
கூட்டத்தில் எஸ்.பி. பிரதீப்குமார், மாவட்ட வருவாய் அதிகாரி கே.பாலசுப்பிரமணியம், மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பக அறக்கட்டளையின் இயக்குநர் அருணாபாசு சர்க்கார், கடலோர காவல்படையின் கமாண்டர்கள் சைனி, திவாரி, வனக் காப்பாளர் சுந்தரக்குமார், வனப் பாதுகாவலர் மல்லேசப்பா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
அவசர உதவி எண் 1093
ராமேஸ்வரம் : நடுக்கடலில் ஏற்படும் படகு விபத்து குறித்து உடனடியாக தகவல் தெரிவிக்கும் வகையில், கோஸ்டல் போலீசின் அவரச உதவி எண்ணை படகில் எழுத, அரசு உத்தரவிட்டுள்ளது. கடலுக்குள் செல்லும் மீனவர்கள், நடுக்கடலில் ஏற்படும் இயற்கை சீற்றம், படகு பழுது போன்ற பிரச்னைகள் குறித்து உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவித்து, மீட்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டியுள்ளது. அந்த சூழ்நிலையில், உதவிக்காக கோஸ்டல் போலீசாரால் அவசர உதவி எண் 1093 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மீனவர்கள் இந்த எண்ணை தொடர்பு கொண்டு, நடுக்கடலில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளைக் கூறினால், சென்னை கன்ட்ரோல் ரூமில் இருக்கும் அதிகாரிகள், அந்த பகுதி இந்திய கடலோர காவல் படை போலீசாருக்கு தகவல் கொடுத்து, உடனடியாக மீட்பு நடவடிக்கை மேற்கொள்வர்.
அரசு உத்தரவின்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து விசைப்படகுகளிலும் மீனவர்களுக்கு நன்கு தெரியும் வகையில், அவசர உதவி எண் 1093 என எழுதப்பட்டு வருகிறது. இதன் மூலம், "மீன் பிடிக்கச் சென்று பிரச்னைகளை சந்திக்கும் மீனவர்கள், இனி நடுக்கடலில் இருந்தே தகவல் தெரிவித்து உடனடியாக உதவி பெற முடியும்' என, மீன்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அரசு உத்தரவின்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து விசைப்படகுகளிலும் மீனவர்களுக்கு நன்கு தெரியும் வகையில், அவசர உதவி எண் 1093 என எழுதப்பட்டு வருகிறது. இதன் மூலம், "மீன் பிடிக்கச் சென்று பிரச்னைகளை சந்திக்கும் மீனவர்கள், இனி நடுக்கடலில் இருந்தே தகவல் தெரிவித்து உடனடியாக உதவி பெற முடியும்' என, மீன்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Monday, May 24, 2010
மீன்வளத்துறையை ஒழுங்குபடுத்தாவிட்டால் 40 ஆண்டுகளில் கடல் மீன்கள் அனைத்துமே அழிந்து விடும் அபாயம் உள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபையின் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்த அவர்கள், நமக்குக் கிடைக்கும் பல்வேறு மதிப்பீடுகளின் அடிப்படையில் இத்தகைய முடிவுக்குத்தான் வரவேண்டியுள்ளது. மீன்களுக்கென பாதுகாப்பு மண்டலங்கள் அமைக்கப்பட வேண்டும். கிட்டத்தட்ட நூறு கோடி மக்கள் மீன்வளத்தை நம்பி இருக்கின்றனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் ஏழை நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று குறிப்பிட்டுள்ளனர்.
புயலுக்கு பெயர் வந்தது எப்படி? .....
“லைலா” புயலுக்கு அந்த பெயர் வந்தது எப்படி? என்பது பலருடைய கேள்வி. அதற்கு பதில் இதோ...புயலுக்கு பெயர் சூட்டும் வழக்கம் 20-ம் நூற்றாண்டு தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவில்தான் முதன் முதலில் அறிமுகமானது. அப்போது, வானிலை அதிகாரிகள் தங்களுக்கு பிடிக்காத அரசியல் தலைவர்களின் பெயர்களை புயலுக்கு சூட்டினார்கள்.
1953-ஆம் ஆண்டு புயல்களுக்கு பெயர் சூட்டுவதை அமெரிக்கா முறைப்படுத்தியது. அதற்கான பெயர் பட்டியலையும் தயாரிக்கப்பட்டது.
இந்திய துணைக்கண்டத்தில் 2004-ம் ஆண்டு முதல் புயல்களுக்கு பெயர்கள் சூட்டப்பட்டன. இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா, அரபிக்கடலில் உருவாகும் புயல்களுக்கு இந்தியா, பாகிஸ்தான், வங்காள தேசம், மாலத்தீவுகள், மியான்மர், ஏமன், தாய்லாந்து, இலங்கை ஆகிய நாடுகள் பரிந்துரைத்த பெயர்கள் சூட்டப்படுகின்றன.
இந்திய துணைக்கண்டத்தில் வீசும் புயல்களுக்கு மொத்தம் 64 பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இவற்றில் நர்கீஸ், நிஷா அய்லா, ராஷ்மி உள்பட 22 பெயர்கள் இதுவரை பயன்படுத்தப்பட்டுள்ளன.இப்போது, சென்னை நகரை ஒரே நாளில் மழையாக வந்து மிரட்டி விட்டு, ஆந்திராவை பெரும் பாடுபடுத்திய புயலுக்கு “லைலா” என்று வானிலை ஆய்வு மையம் பெயர் சூட்டியது.
“லைலா” என்றால் “கருங்கூந்தல் அழகி” என்பது பொருள். பெர்சியன் மொழியில் இதற்கு இரவு என்பது அர்த்தம். இந்த பெயர் பாகிஸ்தானால் பரிந்துரைக் கப்பட்டு புயல்களின் பெயர் பட்டியலில் இடம் பெற்றிருந்தது. கோடைக்காலத்தில் திடீரென்று கருமேகங்களை அள்ளி வந்ததால் இந்த புயலுக்கு “லைலா” என்ற பெயரை தேர்ந்து எடுத்தனர்.
உலகம் முழுவதும் எளிதாக அடையாளம் காண்பதற்காகவும், எச்சரிக்கை விடவும் புயலுக்கு பெயர் சூட்டப்படுகிறது. அடுத்து இந்திய துணை கண்டத்தில் உருவாகும் புயலுக்கு சூட்டுவதற்கு “பாண்டு” என்ற பெயரை தேர்ந்தெடுத்துள்ளனர். இது இலங்கையால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Posts (Atom)



















